என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருமானச்சான்றிதழ்"
- 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கல்லூரியில் சேர்ந்திடும் பொருட்டு, இணையதளத்தின் வாயிலாக, சாதிச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த வானூர் வட்டம், தென்கொடி ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சாருமதி மற்றும் சரண்யா ஆகியோ ருக்கு மாவட்டகலெக்டர் பழனி பழங்குடியி னருக்கான இருளர் சாதிச் சான்றித ழ்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் இணையதளம் வாயிலாக 10,515 சாதிச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,865 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 11,428 வருமானச் சான்றி தழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 9,714 நபர்களுக்கு வருமானச்சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. 9,795 இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,685 நபர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க அனுமதிக்க ப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விண்ணப்ப தாரரின் மனுக்கள் உரிய விசார ணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கபடவுள்ளது. அதனடிப்படையில், வானூர் வட்டம், தென்கொடிப்பாக்கம் கிராமத்தினைச் சேர்ந்த வீரப்பன் மகள்களான சாருமதி மற்றும் சரண்யா கல்லூரி மேற்படிப்பிற்காக சாதிச்சான்றிதழ் வேண்டி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்ப ங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு இரு மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான இருளர் சாதிச் சான்றி தழ்கள் வழங்கப்ப ட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்பர மேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர்ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்