என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விடுதி கட்டணம்- உணவு விலை உயர்வு"
- ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
- விலை உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டி
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும், ஊட்டியில் தற்போது கோடை விழா தொடங்கப் பட்டுள்ளதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை பாா்வையிட்டு வருகின்றனா்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள பெரு ம்பாலான விடுதிகளில் தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
சாதாரண விடுதிகளில் ஒருநாள் அறை கட்டணம் ரூ. 1,800-இல் இருந்து ரூ. 2,700 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் கூடிய அறை கட்டணம் ரூ.2,300இல் இருந்து ரூ.3,000 ஆகவும், காட்டேஜ்களின் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சற்றுலா பயணிகள் கூறுகையில், ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ள நிலையில், வார விடுமுறை நாட்களில் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வும், கடந்த 2 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
இதனால் அவதி யடைந்து வருகிறோம். இதுதவிர உணவு பொருட்க ளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே விடுதி கட்டணங்களை முறைபடுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்