என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேரளாவுக்கு தடை"
- அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- குமரி மாவட்டத்தில் உள்ள வளங்கள் பாதிக்கப்படுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாக னங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. படந்தாலுமூடு, கோழிவிளை, சூழால் ஆகிய சோதனை சாவடிகள் வழியாகத்தான் இந்த கனரக வாகனங்கள் செல்கின்றன.
அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களால் சாலைகள் பெரும் அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனை தொடர்ந்து கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தினர். இதனை தொடர்ந்து கனிம வளங் களை கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.
தற்போது கனரக வாக னங்களில் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதற்கு மிகவும் சுலபமாக பைபாஸ் ரோடு கிடைத்திருக்கிறது. அதாவது படந்தாலுமூடு சோதனை சாவடியை தாண்டி கோழிவிளை சோதனை சாவடி வழியாக செங்கவிளை வந்து 4 வழி சாலை வழியாக கேரளா வுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இது, தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதி் என்பதால் சுலபமாக கேரளாவுக்கு கடத்துவதற்கு வசதியாக இருக்கிறது.
இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள வளங்கள் பாதிக்கப்படுகிறது. காவல் துறையினர் சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போது கனரக வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு வந்தாலும் அவர்கள் கை கட்டி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள் என பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் வேதனை தெரி விக்கின்றனர்.
இதனை விடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்