search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரு சிலை"

    • நேரு சிலைக்கு காங்கிரசார் மரியாதை செய்தனர்.
    • தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளைம்

    முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகில் உள்ள அவரது சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை கெலுத்தினர். இதில் நாகரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர், சங்கர் கணேஷ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் ஸ்ரீமான்ராமச்சந்திர ராஜா, நகர துணை தலைவர் சிவசுப்பிரமணியன், சேவாதளம் பச்சையாத்தான், ரவி, தயானந்தராஜா, வெங்கடேஷ், முருகேசன், சேத்தூர் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று விருதுநகர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் அய்யனார் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர துணைத் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் குமாரசாமி ராஜா மாலை அணிவித்தார்.இதில் மாநில காங்கிரஸ் மனித உரிமை பிரிவு செயலாளர் ராம அழகு, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ராமர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×