search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மருத்துவர்கள்"

    • போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுக்குறித்து மருத்துவ மற்றும் ஊரக நலத்துறை அலுவலர் மாரிமுத்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் விசாரணை செய்து வந்தார்.

    அப்போது சின்ன வளையம் கிராமம் தோப்புத் தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பத்மநாபன் (58), அதே பகுதி கீழத்தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் பாண்டியன் (61), பெரிய வளையம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மகாமணி மகன் தமிழ்ச்செல்வன் (39) ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளில் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தது அந்தப் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • மருத்துவ படிப்பு படிக்காமலே போலி மருத்துவர்கள் பல ஊர்களில் சிகிச்சை செய்வதாக கூறப்படு கின்றது.
    • சிகிச்சை அளிப்பவர்கள் மீது மாவட்ட மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் அதிக அளவு மலைபகுதிகளை கிராமங்களை கொண்ட கிராமங்கள் உள்ளன.

    தற்போது உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, மாசு கலந்த காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் மருத்துவ மனைகள், மருந்து கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மருத்துவ மனைகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள மக்கள் அந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

    இந்த மருந்து கடைகளில் மாத்திரைகளானது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் பல இடங்களில் மருத்துவ படிப்பு படிக்காமலே போலி மருத்துவர்கள் பல ஊர்களில் சிகிச்சை செய்வதாக கூறப்படு கின்றது.

    பல இடங்களில் மாத்திரை, மருந்து கொடுப்ப வர்களும் அதற்கான எந்த படிப்பும், தகுதியும் இல்லாமல் கொடுத்து வருவதாக கூறப்படு கின்றது.

    தடுக்கவேண்டிய அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதுபோல சிகிச்சை அளிப்பவர்கள் மீது மாவட்ட மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×