என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேப்பாக்கம் ரெயில் நிலையம்"
- சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
- மாநகர போக்கு வரத்து கழக அதிகாரிகள் மாநகர பஸ்களை சேப்பக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம் என்று கூறியுள்ளனர்.
சென்னை:
சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் ஜூலை 1-ந்தேதி முதல் 2024 ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் வேளச்சேரியில் இருந்து வரும் பறக்கும் ரெயில்கள் சேப்பாக்கத்தில் நிறுத்தப்படுகின்றன. சேப்பாக்கம்-வேளச்சேரி இடையே திருத்தி அமைக்கப்பட்ட ரெயில் அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
எனவே பயணிகளின் வசதிக்காக சேப்பாக்கத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் மாநகர போக்கு வரத்து கழக அதிகாரிகள் மாநகர பஸ்களை சேப்பக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பறக்கும் ரெயிலை சேப்பாக்கத்தில் நிறுத்துவதால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் 100-க்கணக்கான பஸ்களை சேப்பாக்கத்துக்கு திருப்பி விடுவது கடினம்.
சேப்பாக்கத்துக்கு பதிலாக பறக்கும் ரெயிலை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கினால் அங்கிருந்து அருகில் உள்ள பாரிமுனை பஸ் நிலையத்துக்கு செல்ல 100-க்கணக்கான பஸ்கள் உள்ளன. மேலும் பயணிகள் சிறிது தூரம் நடந்து சென்றால் சிம்சன் பஸ் நிலையத்தில் இருந்து சாலிகிராமம்-பாரிமுனை, கோயம்பேடு- மெரினா இடையே செல்லும் பஸ்களில் ஏறி பயணம் செய்யலாம். இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் அண்ணா சதுக்கத்தை எளிதில் அடையலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்குவது தொடர்பாக பரிசீலித்தோம். ஆனால் சிந்தாதிரிப்பேட்டைக்கு ரெயில்களை இயக்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்றார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் ஆேலாசனை செய்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கிடையே சேப்பாக்கத்தில் பறக்கும் ரெயில் நிறுத்தப்பட்டால் மெட்ரோ ரெயில் நிலையத்தை போல ஷேர் ஆட்டோக்கள் அல்லது பைக் டாக்சிகளை இயக்க வேண்டும் என்று ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
- பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
சென்னை:
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரெயில்கள் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் பறக்கும் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பரங்கிமலையில் இருந்து இனி நேரடியாக கடற்கரை பகுதிக்கு செல்லலாம் என்று காத்திருந்தோம். 12 ஆண்டுகள் காலதாமதத்துக்கு பிறகு நேரடி ரெயில் இணைப்பை பெற இருந்தோம். பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா ரெயில் நிலையம் வரையிலாவது இயக்க வேண்டும்" என்றனர்.
இந்த நிலையில் ரெயில் பயணிக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது மற்றும் ரெயில் சேவை வழங்குவது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம். பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வேளச்சேரி பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பூங்கா வரை பறக்கும் ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏறி தாங்கள் போக விரும்பும் இடத்துக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா வரை இயக்குவது பற்றியே ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் வசதி கருதி இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்