என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷ பூச்சி"
- திடீரென்று அவரை விஷ பூச்சிஒன்று கடித்ததாக தெரிகிறது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டியில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி (வயது76).
விவசாயியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அவரை விஷஜந்து ஒன்று கடித்ததாக தெரிகிறது.
இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். உடனே காந்திமதியை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷ பூச்சி கடித்து ஆடு மேய்த்தவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் அக்ரகார தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 29). இவருக்கு கடந்த வாரத்தில் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வசிக்கும் சகோதரி பாண்டீஸ்வரி வீட்டிற்கு சென்றார்.
அவர் சுப்பையாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று சுப்பையா ஊருக்கு சென்று விட்டார். 2 நாட்கள் கழித்து மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் சுப்பையா சகோதரி வீட்டிற்கு வந்தார். அவரை மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அரசு மருத்து வமனைக்கு செல்லுமாறு கூறி உள்ளனர்.
உடனடியாக பாண்டீ ஸ்வரி தம்பி சுப்பையாவை ஸ்ரீவில்லி புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் தலைமை டாக்டர் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறி உள்ளனர்.
மறுநாள் சென்றபோது அவரை பரிசோதித்த தலைமை டாக்டர் உடலில் விஷம் பரவி இருப்பதாக கூறி பூச்சி எதுவும் கடித்ததா? என சுப்பையா விடம் விசாரித்தார். அப்போது தான் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது பூச்சி கடித்ததாக சுப்பையா கூறினார். அவருக்கு சிகிச்சை அளித்த தலைமை டாக்டர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாண்டீஸ் வரி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்