search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு வளர்ப்பு"

    • கலப்பு தீவனம் தயாரித்தல், நல்ல ஆடுகளை தேர்வு செய்தல் குறித்து விளக்கி கூறப்பட்டது.
    • வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய கண்காட்சி திறந்து வைக்கபட்டது.

    திரூவாரூர்:

    நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண் மேல் ஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு தஞ்சையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மைய வளாகத்தலைவர் டாக்டர். ஜெகதீசன் தலைமை தாங்கி நல்ல ஆட்டின் இனங்கள், அவற்றை தேர்வு செய்யும் முறை, இனப்பெருக்க முறைகள் குறித்து பேசினார்.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி முன்னிலை வகித்தார்.

    பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சபாபதி பேசுகையில், ஆடு வளர்ப்பதற்கான கொட்டகை முறைகள், பசுந்தீவன உற்பத்தி முறைகள், கலப்பு தீவனம் தயாரித்தல் மற்றும் நல்ல ஆடுகளை தேர்வு செய்தல் குறித்து விளக்கி கூறினார்.

    நீடாமங்கலம் கால்நடை உதவி டாக்டர் பவித்ரா ஆடுகளை தாக்கும் நோய்கள்மற்றும் அவற்றை தடுக்கும் முறை குறித்து விளக்கி கூறினார்.

    முன்னதாக வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய கண்காட்சியை டாக்டர் ஜெகதீசன் டாக்டர் ஜெகதீசன் திறந்து வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
    • பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஆடுகளை பாரம்பரியமாக வளர்த்து வருபவர்கள் ஒரே கிடாயை பல ஆண்டுகள் இனவிருத்திக்காக பயன்படுத்துகின்றனர்.

    இனவிருத்தி மேலாண்மை

    இவ்வாறு பயன்படுத்தும் போது உள் ரத்த சொந்தங்கள் கூடி பிறக்கக்கூடிய பெட்டை ஆடுகளின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் பிறக்கக்கூடிய குட்டிகளில் இறப்பு விகிதம் கூடியும், இனவிருந்திய பண்புகள் மற்றும் வளர்திறன் பாதிப்புடனும் காணப்படுகிறது.

    இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பட்டியில் இனவிருத்திக்காக வளர்க்கப்படும் கிடாக்களை மாற்ற வேண்டும். மாற்று மந்தைகளில் இருந்து பொலி கிடாய்களை தேர்வு செய்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய ரத்த சொந்தங்களை தவிர்த்து உற்பத்தியை மேன்மை அடைய செய்ய முடியும்.

    கொட்டகை பராமரிப்பு முறைகள்

    பகுதிநேர மேய்ச்சல் முறையில் ஆடுகளை லாபகரமாக வளர்க்கலாம். இரவு நேரங்களில் மட்டும் ஆடுகளை அடைப்பதற்கு கொட்டகை அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி என்ற அளவில் இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும். தரையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கொட்டகையின் தரைத்தளம் இருக்குமாறு அமைக்க வேண்டும். சாதாரண மண் தரையின் அமைப்பே போதுமானது.

    கொட்டகையின் மத்தி உயரம் 10 முதல் 11 அடியாகவும், சாய்ப்பு உயரம் 78 அடியாகவும் இருக்குமாறு அமைத்தல் அவசியம். வெள்ளாடு கொட்டகையாக இருந்தால் 2½ அடி பக்கவாட்டு சுவரும், செம்மறியாட்டு கொட்டகையாக இருந்தால் 1 அடி பக்கவாட்டு சுவரும் தேவை. மேலும் தரையில் இருந்து 4 அடிக்கு கம்பிவலை அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    மேய்ச்சல் பராமரிப்பு முறைகள்

    மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளுக்கு குறைந்த விலை தாவர வகை கழிவுகள் மற்றும் உலர் தீவனங்களை கொடுத்து வளர்க்கும் போது அவற்றின் உடல் எடை நன்றாக கூடும். மேலும் ஒரு நாளைக்கு 8 மணி நேர மேய்ச்சல் அவசியமாகிறது. அதிக குளுமை இல்லாத நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கு அனுப்பலாம் மேலும் மாலை வேளைகளில் ஆடுகள் நன்றாக மேயும்.

    • ஆடு வளர்ப்பு தொழிலில் கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, கொம்பூதி, சடைமுனியன் வலசை, பிரப்பன் வலசை, தேர்போகி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கடலோர கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக செய்து வந்தனர். இந்நிலையில் கூடுதலாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதால் தற்போது பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக கிராமங்களில் ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடையை வைத்து ஆடுகளுக்கு பணம் வழங்கப்படுவதால் எடை அதிகரிக்க தீவனமாக சோளம், அகத்தி கீரை போன்ற உணவுகள் கொடுக்கப்படுகிறது.

    பண்டிகை நாட்களில் மட்டும் இறைச்சி தேவை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாரத்தில் ஒரு நாள் இறைச்சியை உணவாக சேர்த்துக்கொள்ளும் முறையை ஏராளமானோர் கடைபிடிப்பதால் தேவை அதிகரித்து, ஆடுகள் விலை உயர்ந்து இறைச்சி விலையும் எகிறியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ இறைச்சி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை குறிப்பிட்ட சமூக மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலை செய்து வந்தனர். இதில் வருவாய் அதிகமாக கிடைப்பதை அறிந்த மக்கள் வீடுகள் தோறும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். அதிகமான ஆடுகள் இருந்தாலும் தேவை அதிகரிப்பால் விலை குறைவதற்கான வாய்ப்பு கிடையாது.ஆடுகளை நோய்கள் தாக்காத நிலையில், சுகாதாரத்துடன் வளர்த்து வந்தால் நல்ல விலைக்கு ஆடுகளை விற்பனை செயது வருகின்றனர். தற்போது பக்ரீத் பண்டிகை வருவதால் விற்பனைக்கு கிராமங்களில் ஆடுகள் வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

    ×