என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிம் கார்டு வாங்கியவர்கள் குறித்து"
- நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிம்கார்டு விற்கும் முகவர் இளம்பரிதி (33) என்பவர் போலியாக ஆவணம் தயாரித்து சிம் கார்டுகளை விற்பனை செய்வ தாக ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது. இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா தலைமை யிலான போலீசார் இளம்பரிதியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆதாயம் அடையும் வகையில், ஒரு சிலரின் புகைப்படத்தை பல்வேறு நபர்களின் அடை யாள ஆவணங்களுக்கு பயன்படுத்தி போலியான ஆவணம் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவ னங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி அந்த நிறுவனங்களை நம்பவைத்து சிம் கார்டுகளை பெற்றுள்ளது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.
இந்த நிலையில் கைதான இளம்பரிதியிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட சிம்கார்டுகளை வாங்கியவர்கள் யார்? யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். மேலும் இவர் எத்தனை பேருக்கு போலி ஆவணம் மூலம் சிம்கார்டு கொடுத்து உள்ளார். அந்த சிம்கார்டு பெற்றவர்கள் குற்ற பின்னணி யில் உள்ளவர்களா? என்றும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் கூறியதாவது:
சிம் கார்டுகளை விற்ப னை செய்யு ம் முக வர்கள் இதுபோன்று போலியான ஆவ ணங்களை வைத்து சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்து விற்பனை செய்தால் சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ப்படும்.
சிம் கார்டு வாங்கும்போது பொதுமக்கள் தங்களது பெயரில் உள்ள சிம்கார்டு மட்டும்தான் ஆக்டிவேட் செய்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிராம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரி வித்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்பு உள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அல்லது தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி எந்த விபரங்களையும் அப்டேட் செய்ய வேண்டாம். வங்கிகளில் இருந்து தொலை பேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் எந்த தகவலையும் கேட்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பு டன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்