என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மூடப்பட்டது"
- ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
- இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழக சட்டசபையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் மது கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள மது கடைகள், மத வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோல் வருமானம் குறைவாக உள்ள கடைகள், பணியாளர்கள் எண்ணி க்கை குறைவாக உள்ள கடைகள், அருகருகே இருக்கும் கடைகள்.
இது மட்டும் இல்லாமல் மது கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் கூறப்பட்ட கடைகள் ஆகிய வற்றையும் கணக்கெடுப்பின் பணியின் போது அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கள் சேகரித்தனர். அதன் பிறகு இது குறித்து ஆலோசி க்கப்பட்டது. இதில் இறுதியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்ப டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாநகரில் ஈரோடு ரெயில் நிலையம் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, அகில் மேடு வீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், சம்பத் நகரில் உள்ள ஒரு கடை, சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு கடை, சென்னி மலை ரோட்டில் உள்ள ஒரு கடை, கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு கடை உள்பட மாநகர் பகுதியில் 8 கடைகளும், இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள 16 கடைகள் என 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் அருகருகே இருக்கும் மற்ற மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த நட வடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்க ளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்