என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோசமான நிலை"
- நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது.
- பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்ய வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலசக்காடு, பேரூர் ஊராட்சியின் இணைப்பு சாலையாக உள்ள குறிஞ்சிகுடி, பேரூர் சாலை பல ஆண்டு காலமாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த சாலை சேத்தியாதோப்பு- கும்பகோணம் நெடுஞ்சாலையில் இருந்து நந்தீஸ்வர மங்களம் வழியாக குறிஞ்சிகுடி, பேரூர் ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்கு ஏதுவான சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிளும் மற்றும் பள்ளி வாகனங்களும் சிதம்பரம் வலசாக்காடு நகர பஸ், விருத்தாச்சலம் வலசாக்காடு நகர பஸ்கள் வலசாகாடு, குறிஞ்சிகுடி பேரூர் வழியாக தினம் சென்று வருகின்றன. இந்த சாலையானது மிக மோசமான நிலையில் உள்ளன.
இந்த சாலை இருபுறங்கிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பகல், இரவு நேரங்களில் பொது மக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளி திறந்து விட்டதால் இந்த சாலையை சரி செய்தால் பள்ளி மாணவ- மாணவிகள் பயமின்றி சென்று வரவும், பள்ளி வாகனங்கள் மற்றும் நகரப் பஸ்கள் பழுதடையாமல் செல்வதற்கும் பேர் உதவியாக இருக்கும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு குறிஞ்சிகுடி பேரூர் சாலையை சரி செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்