search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூண்டு"

    • சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

    கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-ம் போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டனர்.

    கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளது.

    இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் நீலகிரி பூண்டு உச்சபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 400 முதல் 300 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.

    சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால் நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது.
    • வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது. சுவாச கோளாறுகளை சரி செய்ய பூண்டிலுள்ள சல்பைடு எண்ணெய் மிகவும் உதவியாக உள்ளது.

    வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும். நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது. கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடிய பூண்டானது செரிமானத்தை சீர்படுத்தக்கூடியது; உடல் எடை கூட்டக்கூடியது.

    சமையலில் முக்கியத்துவம் கொடுத்து பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் சாப்பிடுவதன்மூலம் வாயுதொடர்பான நோய்கள் குணமாகும். இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் நாளடைவில் அவர்களுக்கு நோய்கள் கட்டுக்குள் வரும்.

    சபாஷ் சரியான கேள்விதான். இதைவைத்து ஒரு பட்டிமன்றமே நடத்திவிடலாம். எனினும் இது சற்று சிந்திக்கக்கூடிய விசயம்தான். இந்த விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.

    2015-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த மண்டி வாரியத்தை வற்புறுத்தியது. ஆனால் வேளாண்மைத் துறை வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டம் 1972 -ன் கீழ் பூண்டை ஒரு மசாலாப் பொருளாக மறுவகைப்படுத்தியது.

    இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு கமிஷன் முகவர்கள் சங்கம் 2016-ம் ஆண்டில் வேளாண்துறையின் முடிவை எதிர்த்து மத்தியப் பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் பெஞ்ச்சை அணுகியது. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி நீதிபதி சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார், இந்த முடிவு முக்கியமாக விவசாயிகளை விட கமிஷன் ஏஜெண்டுகளுக்கு நன்மை பயக்கும் என்று வாதிட்ட வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜூலை 2017-ல், மனுதாரர்களில் ஒருவரான முகேஷ் சோமானி ஒரு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி டி.வெங்கடராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் 2015 -ம் ஆண்டின் தீர்ப்பை உறுதி செய்து பூண்டு ஒரு காய்கறியாக அறிவித்துள்ளது. அதாவது தற்போது மீண்டும் காய்கறி பட்டியலில் பூண்டு வந்துள்ளது.

    இந்தூர் பெஞ்ச் இறுதியாக இந்த பல ஆண்டுகளாக நீடித்த விவாதத்தை முடித்து, பூண்டை ஒரு காய்கறியாக அறிவித்து, காய்கறி மற்றும் மசாலா சந்தைகளில் விற்க அனுமதித்துள்ளது. இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே வேளாண் துறை இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்கிறதா அல்லது இதை ஒரு காய்கறியாகக் கருதி இந்த விஷயத்தை கிடப்பில் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.
    • முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது, 1 குழி கரண்டி இட்லி மாவு சேர்த்து கலந்து பஜ்ஜி சுட்டு பாருங்க, சுவையா இருக்கும்.

    • பூரிக்கு மாவு பிசையும் போது 1/2 ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்தால், நீண்ட நேரம் பூரி உப்பலாக, மொறுமொறுப்பாக இருக்கும்.

    • காய்ந்த எலுமிச்சம் பழத் தோலை அலமாதிகளில் வைத்தால் பூச்சி தொல்லை இருக்காது, கொசு தொல்லையும் வராது.

    • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் 1 ஸ்பூன் முகத்துக்கு போடும் பவுடரை போட்டு, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் சமையலறையில் வீசும் துர்நாற்றம் நீங்கும்.

    • அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரை கீழே கொட்டாதிங்க. நீங்கள் வைக்கும் புளிக்குழம்பில், இந்த அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டால் குழம்பு திக்காகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் கிடைக்கும்.

    • உதிர்த்து வைத்திருக்கும் பூண்டுடன் உருளைக்கிழங்கை வைத்தால், சீக்கிரம் முளைத்து வராமல் இருக்கும்.

    • குழம்பு கொதிக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுடுதண்ணீரை மட்டுமே ஊற்றவும். அப்போதுதான் குழம்பின் சுவை மாறாது.


    • முட்டைகோஸ் பொரியல் தாளிக்கும் போது கடுகு, வரமிளகாயோடு சேர்த்து, கொஞ்சம் துருவிய இஞ்சி, 2 கிராம்பு சேர்த்துக்கோங்க. முட்டைக்கோஸில் வரும் பச்சை வாடையும் வீசாது. இதை சாப்பிடுவதால் கேஸ்ட்ரிக் பிரச்சனையும் வராது.

    • தேங்காய் சட்னி அரைக்கும் போது அதில் கோலி குண்டு சைஸ் புளி சேர்த்து அரைத்தால், சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாது.

    • கடாயில் இருந்து அந்த பொரியலை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதன் மேலே 1 பிரட்டை வைத்து, மூடி போட்டு 1/2 மணி நேரம் கழித்து, அந்த பிரட் துண்டை எடுத்து விட்டால், பொரியலில் தீய்ந்த வாடை வீசாது.


    • 1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் 10 மணி நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.

    • பூண்டை குக்கரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 5 - 6 விசில் விட்டு வேக வைத்து கடைந்து, பூண்டு குழம்பு வைத்தால், ஒரு பூண்டு கூட ஒதுக்கி வைக்க மாட்டாங்க.

    • புளித்த தோசை மாவின் மேலே பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் தூவி, இட்லி பொடியையும் தூவி, நெய்விட்டு மிதமான தீயில் ஓரம் எல்லாம் முறுகலாக வரும்படி சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி பூண்டு விற்பனைக்கு வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் பூண்டுவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.320 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.200 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை பயன்படுத்தி விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதனால் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பூண்டு வியாபாரிகள் கோரிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைவால் பூண்டு விலை ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் பீர்க்கங்காய் கிலோ ரூ.70-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.35-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.50-க்கும் மொத்த விற்பனையில் விற்கப்படுகிறது.

    • விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
    • கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது.

    சென்னை:

    கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பூண்டு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு (ஜனவரி மாதத்தில்) ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் அதன் பிறகு ராக்கெட் வேகத்தில் அதன் விலை அதிகரித்தது.

    மலைப் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த பூண்டின் விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்ததாலேயே அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாசலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வரத்து அப்போது குறைந்திருந்தது.

    விலை தொடர்ந்து அதிகரித்து வந்து கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் அப்போது ஒரு கிலோ பூண்டு ரூ.500 வரை விற்பனை ஆனது. மற்ற மாவட்டங்களில் ரூ.550 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது.

    மாத பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத உணவு சார்ந்த பொருட்களில் ஒன்றான பூண்டின் இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பேரிடியாக அமைந்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து விலை அதே நிலையில் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து பூண்டு வரத்து சற்று அதிகரித்ததால் அதன் விலை குறையத் தொடங்கியது.

    கடந்த மாதம் 25-ந்தேதி ஒரு கிலோ பழைய பூண்டு ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், புதிய பூண்டு ரூ.180 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை ஆனது. அதன் பின்னரும் விலை குறைந்து வந்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூ.160 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அதன் விலை மேலும் கிலோவுக்கு ரூ.50 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.350 வரையில் விற்பனை ஆனது.

    தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் சீனாவில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் அதன் விலை மேலும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு தற்போது 400 ரூபாய் அதிகரித்து உள்ளது.

    இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் தாக்கம் ஏழை மக்கள் மட்டும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆண்டில் சராசரியாக தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றம் சந்தித்து வரும் நிலையில் தற்போது பூண்டு, இஞ்சி போன்ற சிறு பொருட்கள் விலை ஏற்றமும் மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அத்தியாவசிய சமையல் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும் போது,

    தற்போது பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து ரூ.150-க்குள் வந்துவிடும் என்றனர்.

    • பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் பாதிக்கப்பட்டது.
    • தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை போளூர், கூக்கால், புதுப்புத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.

    புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு விவசாயத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை, மண்ணின், தன்மை, மலையின் உயரம் போன்ற காரணிகளால் இந்த மலைப்பூண்டுக்கு கடந்த 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

    இருந்தபோதும் பல சமயங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர். தற்போது மலைப்பூண்டுக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

    1 கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டு வந்த மலைப்பூண்டு தற்போது ரூ.600 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கூடுதல் பரப்பளவில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படவில்லை.

    வடமாநிலங்களில் இருந்து வரும் வெள்ளைப்பூண்டு வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் கொடைக்கானலில் இருந்து மட்டுமே வெள்ளைப்பூண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.

    பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் இங்கு பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து பெரியகுளம், வடுகபட்டி சந்தைக்கு மலைப்பூண்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சந்தை தனியார் வசம் உள்ளதால் அவர்களே அதிக லாபம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில்தான் மலைப்பூண்டை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வியாபாரிகள், இடைத்தரகர்கள் தங்கள் லாபத்துக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து விற்று வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அறுவடை செய்யக்கூடிய பூண்டு அனைத்தும் ஓரளவு பதப்படுத்தப்பட்டு 150 கி.மீ தூரத்தில் வாகனத்தில் எடுத்துச் சென்ற பிறகுதான் வடுகபட்டி சந்தையில் சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.

    இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானலில் மலைப்பூண்டுக்கு சந்தை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.

    இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.

    • மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி மார்க்கெட்டில் உள்ள கடை களில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட பூண்டு இல்லாமல் ரசம் உள்பட எந்தவொரு சமையலும் செய்ய முடியாது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டுவின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், உஜாலா கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.22-க்கும், சின்ன வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.25-க்கும், உஜாலா கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.15-க்கும், விற்கப்படுகிறது. சீசன் முடிந்து வரத்து குறைந்துள்ளதால் ஊட்டி கேரட் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    • விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
    • 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது.

    இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது.

    விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×