search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் மருத்துவமனை"

    • பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள்.
    • தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ரூ.5 செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை பொது இடங்களில் போடுவதை தடுக்க தமிழக அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    பொதுவாக ஆஸ்பத்திரி மற்றும் பொதுஇடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கீழே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அதை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், எந்திரம் (இன்ஸ்டா பின்- ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்) ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் வைத்து இருக்கிறது.

    இந்த எந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது, அதில் உள்ள 'சென்சார்' மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    'சோலார்' முறையில் இயங்கும் இதில் 300 பிளாஸ்டிக் பாட்டில்கள் சேமிக்கும் வகையில் உள்ளது. மேலும், இதில் ஒரு முறை 500 முகக்கவசம் வரையில் வைக்க முடியும். குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த எந்திரத்தில் காலி பாட்டில்களை போட்டு, முகக்கவசத்தை பெறுவதை பார்க்க முடிகிறது. மேலும், இதுகுறித்து குழந்தைகள் நல ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அலுவலர் கங்காதரன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதுகுறித்து, குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் ரெமா கூறுகையில், 'காலி பிளாஸ்டிக் பாட்டில் போடும் எந்திரம் அமைத்த உடனே ஏராளமானோர் இதை பயன்படுத்தினர். தற்போது ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் 75 சதவீதம் போ் காலி பாட்டில்களை இதில் போடுகின்றனர். விரைவில் அனைவரும் பயன்படுத்த தொடங்குவார்கள் என நம்புகிறோம்.

    பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொடுப்பதை விட, இதுபோன்ற எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வாக இருக்கும். புதிதாக ஒரு எந்திரங்களை பார்ப்பவர்கள் அது எவ்வாறு இயங்கும் என்பதை பார்ப்பதற்காக காலிபாட்டில்களை போடுவார்கள். அது நாளடைவில் அவர்களுக்கு காலி பாட்டில்களை பொது இடங்களில் போடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும்' என்றார்.

    • 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள்.
    • குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சை பெற வருகிறார்கள். தினமும் 100 குழந்தைகள் குறையாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களுடன் உறவினர்களும் வருவதால் மருத்துவமனை வார்டுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டமாக உள்ளது.

    300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள். அவர்கள் பகலில் அங்குள்ள மரத்தடியில் தங்குகிறார்கள். இரவில் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் தூங்குகிறார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

    இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் வாழை இலைகளை சுருட்டி அந்த பகுதியிலேயே வீசி விடுகிறார்கள்.

    குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு டோக்கன் முறை இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்து தற்போது கூட்டத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் தயாரானதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள்.
    • குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சை பெற வருகிறார்கள். தினமும் 100 குழந்தைகள் குறையாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அவர்களுடன் உறவினர்களும் வருவதால் மருத்துவமனை வார்டுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டமாக உள்ளது.

    300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள். அவர்கள் பகலில் அங்குள்ள மரத்தடியில் தங்குகிறார்கள். இரவில் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் தூங்குகிறார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

    இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் வாழை இலைகளை சுருட்டி அந்த பகுதியிலேயே வீசி விடுகிறார்கள்.

    குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு டோக்கன் முறை இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்து தற்போது கூட்டத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் தயாரானதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கம்போல் பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனர் ராஜன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வழக்கம்போல் பணிக்கு வந்த திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சக ஊழியர்கள் எழும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×