என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 339349
நீங்கள் தேடியது "தாராபுரம் கோவில்"
- பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது.
- தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டை மேட்டு தெருவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது வழிபாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.
இந்தநிலையில் கோவிலுக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாம்பு கோவிலில் இருந்த சிவலிங்க சிலையை சுற்றியபடி இருந்தது. இதனால் பக்தி பரவசமடைந்த பக்தர்கள் உடனே பால் ஊற்றி வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் பாம்பு அங்குள்ள மரத்தடிக்குள் சென்று மறைந்தது.
இதையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.
பாம்பு லிங்கத்தை சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X