search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஜா"

    • நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வசூலித்து வந்த மகாராஜா திரைப்படம் பிரபாசின் கல்கி298 ஏடி திரைப்படம் வெளியாகியதால் கொஞ்சம் வசூலில் மந்தம் தட்டியது. இதனால் திரைப்படம் 100 கோடியை எட்டுவதற்கு தாமதம் ஆனது.

    ஆனால் தற்பொழுது திரைப்படம் 100 கோடி வசூலில் தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • மகாராஜா வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளதால் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.

    இந்நிலையில், தற்போது இயக்குனர் பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

    முன்னதாக, மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாகவும் அப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
    • அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா ’பேட் காப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

    மகாராஜா திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

    அங்கு  ஜெயில் குறித்து கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கு விதமாக " ஆம் நான் ஜெயிலில்  இருந்திருக்கிறேன்,  யார அடிக்கக்கூடாதோ அவங்கள அடிச்சதுனால நான் ஜெயிலுக்கு போனேன், நான் தப்பான ஆள் மேல கைய வச்சிட்டேன். நான் ஒரு இரவு முழுசா ஜெயில்ல இருந்தேன். யார் அடிச்சு நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறுனதுக்கு முக்கியமான காரணம், அவரே தான் என்னய ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு" என்று கூறினார்.

    இவ்வாறு கூறியவுடன் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடந்தனர், மேலும் அனுராக் யார் அந்த நபர் என்ற விவரத்தை கூறவில்லை.

    தற்பொழுது அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா 'பேட் காப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
    • வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனெக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேப் போல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

    சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் மற்றப் படங்களில் வில்லனாகவோ ,மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்.

    ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் இவரது 50 வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.

    விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விஜய் சேதுபதி " தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான் , கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன்., அது எல்லாதுக்கும் அமைந்துடாதுள்ள சார்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை வசூலில் எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். அவர் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். நல்ல கதையுடைய திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் நல்ல திரைப்படத்தை பார்த்தால் அப்படக்குழுவினரை நேரில் அழைத்தோ, தொலைப்பேசியில் அழைத்தோ பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    படம் வெளியாகி வெற்றிகரமாக அதன் 2 ஆம் வாரத்தில் நுழைந்துள்ளது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு தெலுங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்து 100 கோடி ரூபாயை இன்னும் சில வாரங்களில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக படம் வெற்றி பெறாது.
    • உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 50-வது படம் மகாராஜா. அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் படம் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளது.

    இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியது, இந்த கதையை கேட்டவுடன் ஒரு பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்தின் போதும் இருக்கும். கதை கேட்கும் போது கொஞ்சம் யூகிக்கலாம்.

    ஆனால் நடித்து முடித்த பிறகு எதையும் யோசிக்க முடியாது. எப்படியும் இந்த படம் ஓடி தயாரிப்பாளருக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் எனது முந்தைய படங்கள் சரியாக ஓடாததால் கட் அவுட் வைப்பவர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு கட் அவுட் வைப்பதால் மக்கள் படம் பார்க்க வரவா போகிறார்கள் என்று பேசியதாக என் நண்பர் கூறினார்.

    அதை யெல்லாம் மனதில் வைத்து நிச்சயமாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அப்படி திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெறாது. உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
    • கடந்த வாரம் வெளியான 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், "மகாராஜா" படத்தில் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் ஆண்டனி நடிக்க ஆர்வம் காட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


    சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் நான் தயாரிக்க, விஜய் ஆண்டனி நடிப்பதாக இருந்தது. கதையை கேட்ட விஜய் ஆண்டனி கதாநாயனாக நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் நிதிலன் ஏற்கனவே பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் முன்பணம் வாங்கிவிட்டதால் அவர்கள் தடையில்லாச் சான்றிதழ் தர மறுத்தனர். அதனால்தான் என்னால் இந்த படத்தைத் தயாரிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.

    தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் இதுவரை ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் விஜய் சேதுபதி நடிக்கும் 50- வது திரைப்படமாகும்.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் 3 நாட்களில் மகாராஜா திரைப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகாராஜா படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 'மகாராஜா'வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஜா பட இயக்குனர் சாமிநாதனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உன்னோட சேர்ந்து படம் பண்ணதில் எனக்கு பெரும் சந்தோஷம். படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே சொன்னேன் படம் வெளியானதும் இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போடுறோம் I Love You என்று இயக்குனருக்கு முத்தம் கொடுக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் துபாய் சென்றனர்.

    புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்வின் ஏற்படும் திருப்பங்களே இப்படத்தின் கதை என இந்த ட்ரைலரை பார்த்தால் தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம்
    • 'மகாராஜா' படத்திற்கு துபாயில் உள்ள அதி உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரைலர் திரையிடப்பட்டது.

    பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது.

    தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மாவீரன்', 'போர் தொழில்', 'ஃபர்ஹானா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', கார்த்தியின் 'ஜப்பான்' உள்ளிட்ட படங்களுக்கு அமீரகத்தில் புரோமஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளிவரவிருக்கும் 'மகாராஜா' படத்திற்கு துபாயில் உள்ள அதி உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரைலர் திரையிடல் மற்றும் அமீரகத்தின் சிலிகான் மாலில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஆகியவற்றையும் பலரும் பாராட்டும் வகையில் மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்தது.

     

    உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான 'மகாராஜா' டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட நிகழ்வுகள் புர்ஜ் கலீபாவில் அரிதாகவே நடைபெறும் நிலையில், இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முன்னோட்டம் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'மகாராஜா' பெறுகிறது. இதற்கு முன் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டம் இங்கு வெளியானது. இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     

    முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    முன்னோட்ட வெளியீட்டை தொடர்ந்து துபாய் லூலூ சிலிகான் சென்டிரல் மால் வளாகத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்களின் முன்னிலையில் தந்தை-மகள் இடையே பாசத்தை கூறும் தாயே தாயே பாடலுக்கு W.I.T குழுவை சேர்ந்த தந்தை-மகள் என 10 ஜோடி பங்குபெற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

    தமிழின் பெருமையை சொல்லும் கலை நிகழ்ச்சிகளையும், பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் அமீரகத்தில் தொடர்ந்து நடத்த விட் ஈவன்ட்ஸ் திட்டமிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    ×