search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீண்டும் 2 பேர்"

    • 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.
    • இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்துக்கு காரில் கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை ஒரு கும்பல் கொ ள்ளையடித்து சென்றது.

    இதை யடுத்து கொள்ளைய ர்களை பிடிக்க அமைக்கப்ப ட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்க ளில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொ ள்ளை சம்ப வத்தில் இதே கம்பெனியில் வேலை ப்பார்த்த ஊழியர் மற்றும் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் பலரை ைகது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தலைமறை வாக இருந்த புதுக்கோ ட்டை மாவட்டம் புலியூர் பகுதியை சேர்ந்த செல்வம் (24), விக்னேஷ் (22) ஆகிய 2 பேரை போலீசார் தேடிவ ந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். இதையடுத்து சென்னிமலை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சென்னிமலை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினர்.

    போலீசார் அவர்கள் 2 பேரையும் புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாள் விசாரணை முடிந்ததும் மீண்டும் கோ ர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில்அடைக்க பட்டனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது-

    இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சிலரிடம் இருந்து ரூ. 5லட்சத்து 55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்ய ப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள தர்மதுரை என்பவரை தொடர்ந்து தேடிவருகிறோம். அவர் பிடிபட்டதால் தான் மீதி பணமும் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    ×