search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண பலன்"

    • போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    • அவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் சையத் மொய்னுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களுக்கு இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர் மாநில தலைவர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில், பிற துறைகளைப் போன்று ஓய்வு பெறும் நாளில் போக்குவரத்து துறையினருக்கும் பணபலன்கள் வழங்க வேண்டும்.

    கடந்த 8 மாதங்களில் 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க வேண்டும் என்றார்.

    ×