என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளமோடி சானல்"
- போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர்
- வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.
கன்னியாகுமரி :
உரப்பனவிளையில் இருந்து வெள்ளமோடி வழியாக முட்டம் செல்லும் சானலில் வெள்ளமோடி பாலம் அருகில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீரினால் சேதமடைந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதனை சரிசெய்ய வெள்ளிமலை பேரூராட்சி தலைவரும், முட்டம் இரட்டை க்கரை கிளைகால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலை வருமான பாலசுப்ரமணியன் பலமுறை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளையும், பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு அளித்தார். மேலும் வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதன் காரணமாக அந்த சானல்கரை யினை சரிசெய்யும் பணி தொடங்கியது. இதை வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள், பஞ். துணைத்தலைவர் கார்த்தி கேயன், ஊர் தலைவர் கிருஷ்ணசாமி ஆசான், பாரதிய மாநில பொதுக்குழு உறுப்பி னர் ரெத்தினமணி, மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பிரபு, வெள்ளிச்சந்தை பாரதிய ஜனதா தலைவர் துரைசிங்கம், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய பொது செயலாளர் குமார், பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்