என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negotiation"

    • ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வெட்டி க்காட்டான் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43).

    கூலித் தொழி லாளி. இவருக்கும், புது விடுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

    இந்நிலையில், ரவி சம்பவத்தன்று பீர் பாட்டிலால் வெள்ளை ச்சாமியை குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார்.

    வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ரவியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி வெள்ளைச்சாமியின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திருவோணம் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,

    • கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை.
    • குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டிய நிலை.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், மாவடுகுறிச்சி ஊராட்சி, செல்வவிநாயகபுரத்தில் குடிநீர் வசதி போதிய அளவு இல்லாததால் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரமணி பேராவூரணி போலீசுக்கு தகவல் அளித்தார்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி கூறியதாவது:-

    குடிநீர் பைப் லைன் மட்டுமே உள்ளது. தண்ணீர் வரவில்லை.

    தண்ணீர் எடுக்க அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

    போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

    இதுகுறித்து மாவடுகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பழனிவேல் கூறியதாவது, செல்வவிநாயகபுரத்தில் சில பகுதிகளில் கூடுதல் குடிநீர் வசதிக்காக பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சாலையில் பள்ளம் தோண்டி இணைக்க வேண்டியுள்ளதால் நெடுஞ்சாலை துறை அனுமதி பெற்று விரைவில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

    • நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

    விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்கா ணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்காலிக பருவகால உதவு பவர் பணியிடங்களுக்கு 16ந் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நேர்காணல் நடக்கிறது.

    விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. நேர்காணலுக்கான நாளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொ ருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து விட்டனர்.

    பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து

    50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • வீட்டிலிருந்த ரூ. 31 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.
    • சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வந்ததுள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடை பெற்று வந்தது.

    இந்நிலையில் பிரதாபரா மபுரம், பூவைத்தேடி, ராமர்மடம் கிராம மக்கள் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது பேசிய பொதுமக்கள் சாராயத்தை ஒழித்தால் நிச்சயம் திருட்டும் குறையும் என கூறினர்.

    அப்போது கூடுதலாக தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றலாம் எனவும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இந்த நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வீட்டிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

    அவரது வீட்டிலிருந்த 31 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து பொது மக்கள் நாகை - வேளாங்கண்ணி சாலையில் பூவைதேடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே போராட்டம் கைவிடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த பகுதியில் சோதனை செய்தனர். வீட்டில் திருடர்கள் பின்புறம் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் 10 சவரன் தங்க நகை கூஜாவில் இருந்ததை திருடர்கள் கவனிக்காததால் நகைகள் தப்பியது.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    • பெண்கள், வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர்.
    • பாதையை மாற்றி அமைக்க பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே புளியஞ்சேரியில் மிகவும் பழமையான புராதான சாலையாக காலம் காலமாக கல்லணை பூம்புகார் சாலை அமைந்துள்ளது. பயன்பாட்டில் இருந்த அந்த சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலை பாதையாக மாற்றி அமைத்து வருகிறார்கள்.

    இந்தப் பாதையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், அவசரகால சிகிச்சைக்கு செல்பவர்கள், பேருந்துகள் என தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஆறுபடையில் நான்காம் படை வீடான சுவாமிமலை கோவிலுக்கு செல்பவர்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றி அமைப்பதால் இவ்வழியில் அனைவரும் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு சுற்றி செல்வதால் முக்கியமாக இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளை நடைபெறுகிறது.

    இதனால் பெண்களும், வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்தை அடைகின்றனர். எனவே இந்த பாதையை மாற்றி அமைக்க வேண்டியும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், தமிழக அரசுக்கும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காலை கல்லணை- பூம்புகார் சாலையில் புளியஞ்சேரி சத்தியாகாலனி அருகில் 200 க்கும் மேற்பட்பட்ட பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கும்பகோணம் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்.

    சுவாமிமலை சிவ செந்தில்குமார், கும்பகோண கிழக்குஆய்வாளர் அழகே சன் மற்றும் கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் சாலை மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் அமைதி பேச்சு வார்த்தை கோட்டாட்சியர் தலைமையில் ஏற்பாடு செய்வதாகவும் உடனே புறவழிச்சாலை அமைக்க ப்பட்டுள்ள இடங்களில் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது இந்த சாலை மறியல் போரா ட்ட த்தால் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.

    பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

    • வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.

    இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.

    பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

    இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது

    இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 11-வது நாளான இன்று கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புதிய ஒப்பந்தம் போடாப்படாமல் விசைத் தறி உரிமை யாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந்தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தள வாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்ேபாது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் தொழி்ற் சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை ேதால்வியடைந்தது.

    ெதாழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.

    அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.

    அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

    அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

    அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    ×