search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் சுட்ட"

    • ஆடி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்து வழிபட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் ,பாண்டமங்கலம், பாலப்பட்டி, மோக னூர், வெங்கரை, ஜேடர்பா ளையம், ஆனங்கூர் பிலிக்கல் பாளையம் , கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், கூடசேரி உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் ஆடி பண்டி கையை முன்னிட்டு நேற்று மாலை தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இளைஞர்கள், குழந்தைகள் அவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் ஒன்று திரண்டு தேங்காய்களை எடுத்து தேங்காயில் துவாரம் போட்டு தேங்காய்க்குள் இருக்கும் தண்ணீருக்குள் வருத்த கடலை, பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, எள் , பாசிப்பருப்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை பொடியாக்கி உள்ளே போட்டனர். பின்னர் தேங்கா யில் உள்ள துவா ரத்தில் அழிஞ்சி குச்சியின் ஒரு முனையை வைத்து அடைத்து மறுமுனையின் குச்சியை கையில் பிடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ மூட்டி அந்த தீயில் நன்றாக தேங்காயை வேக வைத்தனர்.

    பின்னர் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வேக வைத்த தேங்காயை கொண்டு சென்று அங்கு தேங்காயை உடைத்து வைத்தனர்.

    பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விநாயகப் பெருமானை வழிபட்டு தேங்காயிலிருந்த கலவைகளை எடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.

    ×