search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத் துறை"

    • வனத் துறையினரிடம் பச்சை கிளிகள் ஒப்படைக்கப்பட்டது.
    • 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத்துறை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புச் சட்டம் அட்ட வணை 2-ல் உள்ள பச்சைக் கிளிகளை வீடுகளில் வளர் பது தண்டனைக் குரிய குற்ற மாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடா்பாக நாடு முழுவதும் வனத் துறையி னா் வீடுகளில் கிளிகளை வளா்க்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி வருகிற 30-ந் தேதிக்குள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வனத் துறை அலுவலா்களிடம் ஒ ப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னா். அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியில் வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளா்க்கப்பட்ட 18 பச்சைக் கிளிகளை பொதுமக்கள் வனத் துறை யினரிடம் ஒப்படைத்தனா்.மாவட்ட வன அலுவலா் ஹேமலதா தலைமையில் வனத் துறையினா் கூண்டு களில் அடைத்திருந்த பச்சைக் கிளிகளை வனப் பகுதியில் பறக்க விட்டனா்.

    இந்த நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலா்கள் நித்திய கல்யாணி, நாகராஜன், ராஜ சேகரன், அருண்குமாா் மற்றும் வனத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனா்.

    ×