என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கமாண்டோ வீரர்"
- 28 இடங்களில் காமிரா அமைப்பு
- குமரி வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு
நாகர்கோவில் :
பேச்சிப்பாறை வனப்பகுதிகளை யொட்டியுள்ள சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி அட்டகாசம் செய்து வருகிறது. மாடு, 2 ஆடுகளை கடித்து கொன்றது. ஒரு நாயையும் புலி கவ்வி சென்றது. இது ரப்பர் தோட்ட தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படும் பகுதிகளில் காமிராக்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது 28 காமிராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 2 இடங்களில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கூண்டு அமைக்கப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்ட பகுதியிலும் கடந்த 2 நாட்களாக புலி நடமாட்டம் இல்லை. இருப்பினும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது குறித்து வன அதி காரி ஒருவர் கூறியதாவது:-
புலியை பிடிக்க இரவு பகலாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கண்காணிப்பு காமிராவில் புலி சிக்கவில்லை. ஒரு இடத்தில் புலி வந்து சென்றால் மீண்டும் அந்த இடத்திற்கு 3 நாட்கள் கழித்து வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே தற்போது வந்து சென்ற பகுதியில் இன்று அல்லது நாளைக்குள் புலி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புலி இன்று அல்லது நாளைக்குள் சிக்காத பட்சத்தில் புலியை பிடிக்க வெளியே இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை அழைத்து வரலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்