என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணியாளர்களுக்கு பயிற்சி"
- ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூறப்பட்டது.
கோபி:
தமிழக அரசு பொறு ப்பேற்றதும் மகளிருக்கான மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க ப்போவதாக அறிவித்தது. இந்த உரிமைத்தொகையை ரேசன் கடை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் நியாய விலை கடைகளில் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த படிவங்கள் உரிய முறையில் உண்மையான பயனாளி களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடை பணியா ளர்களுக்கும் இது தொட ர்பாக ஆலோசனையும், பயிற்சியும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கோபி கோட்டத்தில் உள்ள கோபி, நம்பியூர், சத்திய மங்கலம், தாளவாடி, அந்தி யூர் மற்றும் பவானி ஆகிய பகுதிகளில் முழுநேர மற்றும் பகுதி நேரமாக செயல்பட்டு வரும் 670 ரேசன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப திவாளர் ராஜ்குமார் தலைமையில் கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நர்மதா முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் பொது விநியோக திட்ட பதிவாளர் கந்தசாமி, கூட்டு றவு சார்பதிவாளரும், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனருமான சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில், கோபி, அந்தியூர், நம்பியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானி ஆகிய 6 தாலுகாவில் உள்ள 680 ரேசன் கடைகளில் பணியாற்றும் 468 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் படிவங்களை வழங்குதல், நாள் தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் 160 பேருக்கு மட்டும் படிவம் வழங்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பணியாளர்களுக்கு கூற ப்பட்டது.
நிகழ்ச்சியில் கோபி குடிமை பொருள் தாசில்தார் கார்த்திக், கோபி வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்