என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீரட்டானேசுவரர் கோவில்"
- ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
- துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன் சன்னதியில் உலக நன்மைக்காக துர்கா மகளிர் மன்றம்சார்பில் 1008 திரு விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
இதனை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி பயபக்தியுடன் வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தீன்ஷா, தக்கார் ஸ்ரீதேவி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், துர்கா மகளிர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடு களை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்