என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.150-க்கு"

    • 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.
    • தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    ஓமலூர்:

    ஓமலூர்,காடையாம் பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகள வில் செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை

    காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. அதனால், பெரும்பா லான விவசாயிகள் குறு கிய கால பயிர்களை தவிர்த்து நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து காய்கறி வருகின்றனர்.

    இந்த நிலையில் குறைந்த நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருந்ததால் விவசாயிகள் தக்காளி அதிகளவில் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். சில விவசாயிகள் மட்டும் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.

    கடந்த மாதம் தக்காளி விலை பன்மடங்கு உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. அதனால் மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்குகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் வட்டாரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நாட்டு தக்காளி தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது. இந்த தக்காளி அளவில் சிறியதாக இருப்பதாலும், 4,5 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்பதாலும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    விலை குறைவு மற்றும் நாட்டு தக்காளி என்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    ×