என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இறைமக்கள்"
- நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.
- நாட்டு மக்களுக்காக ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.
நாகர்கோவில் :
இந்திய மரபில் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும், தியாகத்தின் வெளிப்பாடாகவும் மக்கள் தங்கள் சமயம் சார்ந்த புன்னிய தலங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி திருத்தலம், பூண்டி மாதா கோயில், மலையாற்றூர் தோமையார் திருத்தலம் ஆகிய திருதலங்களுக்கு நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.
இந்திய திருநாட்டில், கேரள மாநிலம் பரணங்கா னத்தில் பிறந்து சீரோ மலபார் திருச்சபை யில் தூய துறவியாக வாழ்ந்து 1946-ம் ஆண்டு விண்ணகம் சென்ற அருட்சகோதரி அல்போன்சாவை 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி திருத்தந்தை 16 பெனடிக்ட் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு புனிதையாக அறிவித்தார். தமிழ்நாட்டில் புனித அல்போன்சாவை பாதுகாவலியாக கொண்ட முதல் ஆலயம் நாகர்கோ வில் புனித அல்போன்சா ஆலயமாகும்.
அல்போன்சா புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் இத்திருத்தலம் நோக்கி நடைப்பயணம் மேற்கொ ண்டு வருகின்றனர். அந்த வகையில் இத்திருத்தலத்தின் இரண்டாம் திருவிழாவின் போது குமரி மாவட்டத்தின் தக்கலை மறைமாவட்டத் திற்கு உரிய 6 மறை வட்டங்களிலிருந்தும், தென்காசி மாவட்டம் புளியறை மறை வட்டத்திலி ருந்தும் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்திற்கு மக்கள் நடைபயணம் வந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதில் 1000-க்கும் மேற்பட்ட விசுவாசிகளுடன், 20-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும், 50-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். திருத்தல பயணமானது காலை 6மணிக்கு ஆரம்பமாகி காலை 11 மணிக்கு நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தை வந்து சேர்ந்தது. திருநடைப்பயணத்தின் போது திருப்பயணிகள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினர்க்காகவும், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.
இந்த திருப்பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பௌவத்துப்பறம்பில் தொடங்கிவைத்தார். தக்கலை மறைமாவட்ட இளைஞர் இயக்க இயக்குநர் பேரருட்தந்தை ஜோசப் சந்தோஷ் தலைமை தாங்கி வழிநடத்தினார்.
நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்த லத்தல்திற்கு நடைபயணமாக வந்த திருப்பயணிகளை திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், திருத்தல துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் மற்றும் திருத்தல பங்குமக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் திருத்தலத்தில் திருப்பயணிக ளுக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருத்தல பயணிகளுக்கு திருத்தலத்தில் தேவையான வசதி மற்றும் ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல பங்குமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்