search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோவில்"

    • வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.
    • பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது.

    புதுச்சேரி:

    உலக மக்கள் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்ற மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவை ஆரோவில் சர்வதேச நகரம் மூலம் நனவாக்கியவர் ஸ்ரீஅன்னை.

    இங்கு பல வெளிநாட்டவர் ஆரோவில்வாசிகளாகவே மாறி அவர்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து வசித்து வருகின்றனர். அப்படி வசிக்கும் ரஷிய தம்பதிகள் செர்க்கே - தான்யா.

    இவர்கள் பயணிப்பது ஏசி காரோ, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளோ கிடையாது. நமது பாரம்பரிய ரிக்சாதான். ஆரோவில் ஆட்டோமொபைல் பணிமனையில் வேலை செய்யும் செர்க்கே வடிவமைத்த கூரை போட்ட ரிக்சாவில் தான் குடும்பமே பயணிக்கிறது.

    அவரது மனைவி தான்யா ஒரு ஓவியர். இவர்களுக்கு 3 குழந்தைகள். ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு ரிக்சாவில் தான் வந்து செல்கின்றனர்.

    வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்கவாட்டில் தடுப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    எத்தனை கி.மீ. தூரமாக இருந்தாலும் செர்க்கே தானே ரிக்சாவை மிதித்து ஓட்டி செல்கிறார். இந்த வாகனம் நகர பகுதியில் செல்லும் போது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

    • ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
    • ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி,

    புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை கடற்கரை சாலையில் வாக்கிங் சென்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை ஜனாதிபதி சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் பிற்பகல் 11:25 மணியளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார் ஜனாதிபதி. ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து தியானம் செய்தார்.

    பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார். பின்னர் அரவிந்தர் ஆசிரம நூலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக்கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து சாலைமார்க்கமாக ஆரோவில் சென்றார். ஆரோவில் நிர்வாகத்தினர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் மாத்ரி மந்திர் சென்றார். மாத்ரி மந்திர் அமைவிடம் குறித்து அவர்கள் விளக்கினர். அங்கே ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அங்கேயே ஜனாதிபதி மதிய உணவருந்தினார். இதன்பின் ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டார்.

    ஆரோவில் சர்வதேச நகரம் உருவான விதம் குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதை ஜனாதிபதி பார்த்தார். தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

    இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

    ×