என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு மதுபாட்டில்கள் அழிப்பு"
- இதுவரை யாரும் அந்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வரவில்லை.
- 12 வருட காலமாக சுங்கவரி துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலைய சரக்கு முனையம் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை செய்தனர். பின்னர் சுங்கவரி பிரச்சனையில் அந்த நிறுவனங்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்லாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எதிர்பார்த்து 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
ஆனால் இதுவரை யாரும் அந்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
12 வருட காலமாக சுங்கவரி துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த வெளிநாட்டு பிராந்தி கம்பெனிகளை தொடர்பு கொண்டு கேட்பாரின்றி கிடக்கும் மது பாட்டில்களின் காலாவதி குறித்து விசாரித்தனர். அப்போது அந்த மதுபான பாட்டில்கள் காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவற்றை கரூரில் உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக அழிக்கும் பணி நடைபெற்றது.
இதில் சுமார் 8,000த்துக்கும் அதிகமான ஒயின் பாட்டில்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதுமாக கொட்டி அழிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட ஒவ்வொரு மது பாட்டில்களின் விலையும் இந்திய ரூபாய் மதிப்புக்கு ரூ.5000 இருக்கும். அவ்வாறு கணக்கிட்டால் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்ட 8000 மது பாட்டில்கள் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்