என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி"

    • மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
    • பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. என்னை யார் முதலமைச்சராக்கியது? அடல் பிகாரி வாஜ்பாய் என்னை முதலமைச்சராக்கினார். நாம் எப்படி மறக்க முடியும்?

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் மத்தியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014இல் பிரிந்தோம்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தோம். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

    பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்றார்.

    • ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது.
    • அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு ஒப்படைப்பதே பாஜக மாடல்.

    ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி அமைப்பு சென்றால் இந்தியா அழிந்துவிடும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

    இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைத்த போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்).

    கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள். இது மிகவும் மெதுவாக தற்போது நடந்து வருகிறது.

    இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மற்றும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த வாரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா பற்றி பெருமையடித்தது குறித்து விமர்சித்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பிரதமர் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாடல், அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்துவிட்டு, அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ்-க்கு தாரைவார்ப்பதாகும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் இந்தியா கூட்டணியின் மாணவர்கள். நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.  நாம் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி ஆர்எஸ்எஸ்ஸை பின்னுக்குத் தள்ளுவோம் என்று ராகுல் காந்தி சூளுரைத்தார்.

     இதற்கிடையே ஜந்தர் மாந்தரில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு அமையும் என்று நவாஸ் கனி எம்.பி. கூறினார்.
    • நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சையது ராஜா முகமது, நகரத் தலைவர் முகமது அபூபக்கர் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் வரவேற்றார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபூபக்கர் வாழ்த்து பேசினார். இதில் மாநில துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு உள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறது என்று சொன்னால் மாநில அரசு இன்றைக்கு கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    மாநில காவல் துறையும் ராணுவமும், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருந்தும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை வரும் 2024 நாடாளு மன்ற தேர்தலில் மதசார்பற்ற அரசு அமைய இந்திய அளவில் வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது.

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுது ணையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு இந்தியாவில் அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சர்தார் நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாராளுமன்றத்தில் சேவைகள் மசோதா மீது காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது.
    • காங்கிரஸ் கட்சியின் டெல்லி தேர்தல் குறித்த அதிரடி முடிவு இந்தியா கூட்டணி இடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த மாத இறுதியில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. இந்த கட்சி டெல்லியில் தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் தங்களது கட்சிக்கு வலுசேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர் என்று செய்தி தொடர்பாளர் அல்கா லம்பா தெரிவித்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டெல்லி காங்கிரசை புத்துயிர் பெற செய்வதே எங்கள் முதல் பணி. டெல்லியை செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றியுள்ளோம், டெல்லி மக்களுக்கான எங்கள் போராட்டம் இன்னும் தொடர்கிறது" என்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது. குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், "எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அடுத்த 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் தலைமை அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வோமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றார்.

    ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மந்திரியுமான சவுரப் ரத்வாஜ் கூறும்போது, "இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தலைமை முடிவு எடுக்கும். எங்கள் தேர்தல் விவகாரக் குழுவும் இந்தியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன" என்றார்.

    ஏற்கனவே மத்திய அரசின் டெல்லி சேவைகள் திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டது. இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான நிபந்தனையாக, அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் ஆம் ஆத்மி கோரியது. பின்னர், பாராளுமன்றத்தில் சேவைகள் மசோதா மீது காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தேர்தல் குறித்த அதிரடி முடிவு இந்தியா கூட்டணி இடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி தீபக் பபாரியா கூறுகையில், "அல்கா லம்பா ஒரு செய்தித் தொடர்பாளர், ஆனால் இதுபோன்ற முக்கியமான விஷயங்களைப் பேசுவதற்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் அல்ல. காங்கிரஸ் கூட்டத்தில் அவர் கூறுவது போன்ற விவாதங்கள் எதுவும் இல்லை என்று நான் ஒரு பொறுப்பாளராகக் கூறினேன்.

    அல்கா லம்பாவின் அறிக்கையை நான் மறுக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியில் முதிர்ச்சியடையாதவர்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஊடக அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுக்க விரும்பினால், கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது," என்று கூறினார்.

    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சிவில் சட்டம் என்ற பெயரால் மதத்தை வைத்து மக்களை பிளவு படுத்துவது, மணிப்பூர், ஹரியானா கலவரத்தை தூண்டுவது, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழி வாங்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் தலைவர் ஹாஜி வருசை முகமது தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழ உறுப்பினர் ராஜன், செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அற்புத குமார், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹீம் மக்கள் ஒற்றுமை மேடை வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
    • உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

    ஐதராபாத்:

    அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. கிட்டத்தட்ட பா.ஜனதா கூட்டணி 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.

    தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும்.

    இந்தியா கூட்டணி என்பது உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.

    உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சிறையில் வாடுகிறார்கள்.

    இந்தியா கூட்டணிக்கு நாங்கள் செல்லமாட்டோம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்.

    தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்தரி சந்திரசேகரராவ் திறமையானவர். தொலை நோக்கு பார்வை கொண்டார். அவரது அரசியல் சாதுரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பா.ஜனதாவின் பி அணியாக செயல்படுகிறது என்று இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.
    • மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்- மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

    எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இதில் 17 கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பா.ஜனதாவை வீழ்த்துவது என்று இந்த கூட்டம் முடிவு செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சி அணியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய 2 தினங்களில் நடக்கிறது.

    இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மகா விகாஸ் அகாதி கூட்டணியில இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்குவதற்கு 175 ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மும்பையில் 31-ந் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் லோகோ வெளியிடப்படும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மும்பையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 முதல் 27 கட்சிகள் பங்கேற்கும். வருகிற 31 மற்றும் செப்டம்பர் 17-ந் தேதிகூட்டம் நடைபெறும். 3-வது கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்கப்படும்.

    நாங்கள் ஒரு பொதுவான லோகோவை உருவாக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 31-ந் தேதி லோகோ வெளியிடப்படும்.

    இவ்வாறு அசோக் சவான் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார்.
    • கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது.

    பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி நிறுத்தப்படுகிறார். ஆனால் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

    இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 16 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது. இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

    அத்துடன் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.40 மணிக்கு விமானத்தில் மும்பை புறப்பட்டுச் செல்கிறார்.

    வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பிரதமர் வேட்பாளர் குறித்து வலியுறுத்தி பேசுவார் என தெரிகிறது. கூட்டம் முடிந்ததும் 1-ந் தேதி இரவு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

    • 28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை.
    • கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மும்பை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து "இந்தியா" (இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த புதிய கூட்டணியை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாடுபட்டு உருவாக்கி உள்ளார். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.

    2-வது ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து 3-வது ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது.

    கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தியா கூட்டணியின் இன்றைய 3-வது கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 பேர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் டி.ஆர்.பாலுவும் சென்றிருக்கிறார்.

    இதுபோல மற்ற கட்சி தலைவர்களும் இன்று காலை மும்பை சென்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓட்டலில் மதிய விருந்து அளிக்கப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் முந்தைய 2 கூட்டங்களை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றும், நாளையும் 2 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

    அதன் அடிப்படையில் அடுத்தடுத்து கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டு போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதுபற்றி 28 கட்சி தலைவர்களும் இன்று விவாதிக்க உள்ளனர்.

    28 கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணிக்கு இதுவரை பொதுவான அலுவலகம் இல்லை. டெல்லியில் அதற்கான அலுவலகத்தை திறப்பதற்கு இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அது போல இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், தலைவர் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும், தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் வேட்பாளர் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டுமானால் பெரும்பாலான தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் 22 கோடி வாக்குகள் கிடைத்திருந்தன. அதே சமயத்தில் தற்போதைய இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு 23 கோடி வாக்குகள் கிடைத்து இருந்தன.

    எனவே பொது வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் பா.ஜனதா வேட்பாளரை எளிதில் வீழ்த்த முடியும் என்று இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்காக தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று சில கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக இன்றும், நாளையும் இந்தியா கூட்டணி தலைவர்கள் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்தநிலையில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே திடீர் சிக்கல் எழுந்துள்ளது. மும்பை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பட்டியலில் தொகுதி பங்கீடு பிரதானமாக இடம் பெற்று இருந்தது. திடீரென அதை விவாதிக்க வேண்டிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் இப்போதே தொகுதி பங்கீடு பற்றி பேசினால் அது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடும். அதனால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தேர்தல் தேதி அறிவித்த பிறகு கடைசி நாட்களில் தொகுதி பங்கீடை தீர்மானிக்கலாம் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தினார். அதனால் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.

    நிதிஷ்குமாரின் கோரிக்கையை சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தொகுதி பங்கீடு இந்தியா கூட்டணியில் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் என்று தெரிவிக்கிறார்கள்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் இன்னமும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மாநிலங்களில் காங்கிரசுக்கும், மாநில கட்சிகளுக்கும் மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.

    டெல்லியிலும், பஞ்சாபிலும் கூட்டணிக்கு தலைமை ஏற்க ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது. அதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்குமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுபோல மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுக்க விரும்பவில்லை.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் காங்கிரசை களம் இறக்க மாநில கட்சிகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் தொகுதி பங்கீட்டை ஒத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    தொகுதி பங்கீடு செய்ய இயலாவிட்டாலும் குழுக்கள் அமைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்கி விட முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி தலைமை புதிய கூட்டணி உருவான போது நாடு முழுவதும் மக்கள் எப்படி ஆதரவு தெரிவித்தார்களோ அதே போன்று இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று இந்த கூட்டணியின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது பற்றி மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. எனவே மும்பை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை பா.ஜனதா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    • நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார்.
    • நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..,

    "இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். இந்திய யூனியனை பாதுகாக்க உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியா கூட்டணி பாட்னாவில் சந்தித்த போது வெறும் 19 கட்சிகள் தான் இணைந்திருந்தன. பிறகு பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கூட்டணி 26 ஆக அதிகரித்தது. தற்போது மும்பை சந்திப்பில் இது 28 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியா கூட்டணி உறுதியாக உருமாறி வருவதை அனைத்து செய்தியாளர்களும் நன்றாகவே அறிவர்."

    "நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் புகார் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி பிரபலம் அடைந்து வரும் நிலையில், மோடி அரசு சமீப காலங்களில் அவ பெயர் அதிகரித்து வருகிறது. நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை. இது நாட்டை காப்பாற்றுவதற்கும், நாட்டில் உள்ள 1.4 பில்லியன் குடிமக்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது."

    "நமது கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இந்த சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக இருந்ததோடு, திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து இருக்கிறது. ஆதரவும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
    • பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது.

    இந்த கூட்டணியில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியும் அங்கம் வகிப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்ற பிறகு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

    இக்கட்சியின் சார்பாக இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திட்ட கமிட்டியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, பிரசார கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஊடகங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    "பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் லட்சியம்" என சந்திப்பிற்கு பிறகு பேசிய மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
    • மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    "இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு "இந்தியா" கூட்டணி கட்சி தலைவர்கள் கலைந்துள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்களிடம் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதையே மும்பை ஆலோசனை கூட்டம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    பாரதிய ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு மும்பை கூட்டத்தின் முடிவுகள் மகிழ்ச்சி தருவதற்கு பதில் ஏமாற்றத்தையே அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேசினால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டு விடும் என்று கருதி அதை சற்று தள்ளி வைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காளம், கேரளா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே மிக எளிதில் தொகுதி பங்கீடு செய்ய முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மும்பை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-

    * பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுணர்வுடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும்.

    * நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்து பொதுக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

    * "ஒன்றாக இணைவோம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்ற கருத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழுதான் இந்தியா கூட்டணியை வழி நடத்தி செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். அவர்தான் இந்தியா கூட்டணி தொடர்பாக இனி முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்த குழு தவிர 19 பேர் கொண்ட பிரசார குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 செயல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 பேர் கொண்ட சமூக வலைத்தள குழு, 19 பேர் கொண்ட ஊடக குழு, 11 பேர் கொண்ட ஆய்வு குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த 5 குழுக்கள்தான் இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது. இதில் முதன்மையான ஒருங்கிணைப்பு குழு விரைவில் கூட இருக்கிறது. அவர்களின் வழிகாட்டுதல் பேரில்தான் ஒரு மாதத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 440 தொகுதிகள் தான் பொது வேட்பாளரை நிறுத்த வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. சரத்பவார் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு இதை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை மற்றும் கொள்கை விளக்க குறிப்புகளை அக்டோபர் 2-ந்தேதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த குறைந்தபட்ச பொது செயல்கொள்கை திட்ட அறிவிப்புகளை டெல்லியில் அக்டோபர் 2-ந்தேதி காந்தி நினைவிடத்தில் வெளியிடவும் எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி ஒருவரை தேர்வு செய்தால் அவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பாரதிய ஜனதா திசை திருப்பி விடும் என்ற பயத்தில் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யாமல் தவிர்த்து உள்ளனர்.

    அதுபோல இந்தியா கூட்டணிக்கு தனி லோகோ ஒன்றை வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த லோகாவை பார்த்து பெரும்பாலான கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கட்சி தேர்தல் சின்னத்தை பாதிக்கும் வகையில் கூட்டணியின் லோகோ அமைந்து விடும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்தியா கூட்டணிக்காக தயாரித்த லோகோ வெளியீடு கைவிடப்பட்டது.

    மும்பையில் நடந்த கூட்டத்தில் சில கட்சி தலைவர்களிடம் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மும்பை கூட்டத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

    கூட்டத்தில் அவர் மற்ற தலைவர்களிடம் பேசுகையில், "நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அவர்கள் தான் கூட்டத்தில் அதிக நேரம் பேசி உள்ளனர். இதனால் பிரயோஜனமும் கிடையாது" என்று அதிருப்தியை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது.

    மம்தா பானர்ஜியை போன்று கெஜ்ரிவாலும் அதிருப்தி தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இத்தகைய சிக்கலை தீர்ப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.

    ×