என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்நாக்"
- எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
- ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
நெய் - ஒரு கப்
கோதுமை மாவு-ஒரு கப்
நாட்டு சர்க்கரை - ஒரு கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 நம்பர்
செய்முறை:-
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.
அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.
இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு
- செய்வதற்கு மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்:
புலுங்கல் அரிசி -ஒரு கப்
நெய் - இரண்டு ஸ்பூன்
வெல்லம் -ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் தூள் -ஒரு சிட்டிகை
முந்திரி
செய்முறை:-
அரிசியை தண்ணீர் விட்டு கழுவி எடுத்து அதனை ஒரு கடாயில் போட்டு நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின்னர் சூடு தணிந்ததும் அதனை மிக்சியில் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து வெல்லம் மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பொடித்த அரிசியுடன், தேங்காய், ஏலக்காய், வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடிக்க வேண்டும். உருண்டை பிடித்த அரிசி உருண்டையின் மீது முந்திரிகளை அலங்கரித்து பரிமாறலாம். அரிசி உருண்டை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்வதற்கும் மிகவும் எளிதானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்