search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரகங்கள்"

    • முன்னொரு காலத்தில் காலவர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார்.
    • காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார்.

    முன்னொரு காலத்தில் காலவர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார்.

    அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடைய வராகத் திகழ்ந்தார்.

    இதனால் சில முனிவர்கள் அவரிடம் வந்து தங்களது வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம்.

    காலதேவனின் கேள்விக்கணை

    ஒருநாள் இளந்துறவி ஒருவர் காலவ முனிவரிடம் வந்தார்.

    தனது வருங்காலம் பற்றி அறிவிக்கும்படி கேட்டார்.

    காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார்.

    "உமது வருங்காலம் பற்றிக் கூற ஒன்றும் இல்லை" என்றார்.

    உடனே அந்த இளந்துறவி காலவ முனிவரைப் பார்த்து "முனிபுங்கவரே! மற்றவரின் வருங்காலம் பற்றிக் கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டோ?" எனக் கேட்டு நகைத்தார்.

    உடனே காலவ முனிவர் இளந்துறவியைப் பார்த்து, 'இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. உண்மையைக் கூறு' என்று வினவினார். 'என்னைத் தெரியவில்லையா? நான்தான் காலதேவன்' என்று சொல்லி இளந்துறவியாக வந்தவர் மறைந்தார்.

    • சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

    சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

    யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.

    சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:

    பரிதி நியமம்,

    வைதீஸ்வரன் கோவில்,

    தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,

    மாந்துறை,

    மங்கலக்குடி,

    குடவாசல்,

    நெல்லிக்கா,

    ஆடானை,

    கண்டியூர்,

    சோற்றுத்துறை,

    மீயச்சூர்,

    மேலைத் திருக்காட்டுப்பள்ளி,

    திருச்சுழியல்,

    வலிவலம்,

    தேவூர்,

    வாய்மூர்,

    திருப்புனவாயில்,

    நன்னிலம்,

    பூந்துருத்தி,

    காஞ்சீபுரம்,

    கேதாரம்

    உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.

    சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.

    • துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.
    • மாலையிலும் மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் புனித நாளாகக் கருதப்படுகிறது.

    அன்று வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

    காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும்.

    சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம்.

    பூஜை அறையில் வெங்கடாஜல பதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும்.

    விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும்.

    துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின் தூபதீபம் காட்ட வேண்டும்.

    பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும்.

    வெங்கடாஜலபதியின் மகிமை பற்றிய நூல்களைப் படித்து "ஓம் நமோ நாராயணா'' என்ற மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

    இதே போல் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று மாவிளக்கு ஏற்றி வெங்கடேசப் பெருமாளை வழிபட வேண்டும்.

    மாவினாலேயே விளக்கு போல செய்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றி வெங்கடேசப் பெருமானை வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது.

    வெங்கடேசப் பெருமானின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    மாவிளக்கு ஏற்றி வைத்த பிறகு அந்த விளக்கு தணியும் போது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.

    • சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
    • மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.

    இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம்.

    இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப்படத்தை வைத்தும் கும்பிடலாம்.

    புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.

    சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.

    துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து,

    மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.

    பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    • புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.
    • புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.

    பெருமாளுடைய அம்சம் என்று சொல்லக்கூடிய கிரகம் புதன்.

    அந்த புதனுடைய வீடு கன்னி.

    இந்தக் கன்னியில்தான் புதன் ஆட்சியும் அடைகிறார், உச்சமும் அடைகிறார்.

    ஒரு கிரகம் ஒரே வீட்டில் ஆட்சியடைவதும், உச்சமடைவதும் மிகவும் அரிதான ஒரு விஷயம்.

    அந்தப் பெருமை கன்னிக்கு உண்டு.

    பெருமாளுடைய அம்சமாக கருதக்கூடிய புதனுடைய வீடு கன்னி.

    புரட்டாசி மாதத்தில் தான் கன்னியில் சூரியன் வந்து அமர்கிறார்.

    ஆகவே தான் இந்த மாதத்தில் திருமாலுக்கு வேண்டிய பஜனைகள், பிரம்மோற்சவங்கள் என்று அனைத்தும் நடைபெறுகிறது.

    எனவே, புதனின் அம்சமாக பெருமாள் இருப்பதால் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கான மாதமாகக் குறிப்பிடுகிறார்கள்.

    புதனுக்கு வெகு நட்பு கிரகமாக சனி பகவான் உள்ளார்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

    • புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
    • இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம்.

    அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்!

    மகாலட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்!''

    என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும்.

    இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.

    புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

    கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

    • இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
    • புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன.

    புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவ பெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம்

    ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.

    புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும்.

    இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.

    இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளயபட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.

    மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும்.

    • ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.
    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று

    ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.

    சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று.

    குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.

    அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.

    புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.

    புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.

    எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    • புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

    சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    இத்தகைய சிறப்புடைய புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும்,

    பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    பக்தர்களின் படையெடுப்பு காரணமாக இந்த மாதம் முழுக்க திருப்பதிமலை எங்கும்

    "ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!" என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும்.

    புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும்.

    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
    • புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.

    புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.

    அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.

    எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.

    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

    அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி,

    பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.

    புரட்டாசி சனிக் கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

    • ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
    • பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள் தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி

    வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.

    புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.

    எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

    இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில் தான்.

    ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

    • ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    நவக்கிரகங்கள் - சூரியன்

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,

    பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.

    அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.

    வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.

    ×