என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக மாநாடு"
- மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது.
- இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது.
நெல்லை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாநில இளைஞர் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினர்.
ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது. மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.
நீதிமன்றம் கூட எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என உறுதி செய்து தீர்ப்பு தந்தது. அதனை ஏற்க முடியாது என சொல்லி கொண்டிருக்கின்றனர். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பிவிடலாம் தூங்கு வதை போல சிலர் நடித்து கொண்டிருக்கின்றனர் அவர்களை எப்படி எழுப்புவது. அவர்களை தேடி கொண்டிருக்கிறோம்.ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-
அ.தி.மு.க.வின் போதிதர்மனாக எம்.ஜி.ஆர் இருந்தபோது 17 லட்சம் பேர் தொண்டர்களாக இருந்தனர். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1½ கோடி தொண்டர்களாக உயர்ந்தனர். தற்போது எடப்பாடியார் காலத்தில் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. உலக அளவில் 7-வது பெரிய கட்சியாக ஏழாவது அதிசயமாக அ.தி.மு.க. இயக்கம் இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை அ.தி.மு.க. மாநாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக இருக்கிறார்.
- மாநாட்டு பணிகள் அனைத்தும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சர்ச்சைகள் ஏற்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து விதமான சவால்களையும் கோர்ட்டு ரீதியாகவும், தேர்தல் ஆணையம் மூலமாகவும் எடப்பாடி பழனிசாமி முறியடித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அ.தி.மு.க. மீண்டும் வலுவாகி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனுடன் கை கோர்த்து உள்ளார். இதனால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு சற்று பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை முறியடித்து அ.தி.மு.க. ஓரணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
அதன்படி மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த மாநாட்டுக்கு "வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
மதுரை அ.தி.மு.க. மாநாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாக இருக்கிறார். இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் அவர் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
மாநாட்டு பணிகள் அனைத்தும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ஒன்றியங்களிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.
மாநாடு ஏற்பாடுகள் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கி மாநாட்டுக்கான இறுதி வடிவங்கள் கொடுப்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடம் பேசினார்.
ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகியும் மாநாட்டுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினார். மாநாட்டுக்கு வரும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 லட்சம் பேரை திரட்டினால் அ.தி.மு.க.வின் பலத்தை அனைத்து கட்சிகளுக்கும் உணர்த்தும் வகையில் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. பொன்விழா மாநாடு என்பதால் தோழமை கட்சியான பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டுக்கும் சவால் விடும் வகையில் அனைத்து வகையிலும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுவதால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வை புத்துணர்ச்சியுடன் தயார்படுத்தவும் பொன்விழா எழுச்சி மாநாடு கைகொடுக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள். எனவே அ.தி.மு.க. மாநாடு அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மதுரைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ்கள், வேன்கள் மற்றும் வாகனங்களை இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் வரும் வாகனங்களை மாவட்ட வாரியாக எங்கெங்கு நிறுத்துவது என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்றை மதுரைக்கு இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறப்பு ரெயில் வருகிற 18-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்.
12 பெட்டிகளுடன் இயக்கப்படும் அந்த சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் இருந்து மதுரை செல்ல உள்ளனர்.
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரைக்கு வரும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க அ.தி.மு.க. சார்பில் தென்னக ரெயில்வேக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வினர் மிக எளிதாக மதுரை வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநாட்டுக்கு கூட்டணி கட்சியினரை அழைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி இன்னும் முடிவு செய்யவில்லை. இன்று நடந்த கூட்டத்தில் அதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
மதுரை செல்லும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்கள், சிறிய ரக ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், லாட்ஜுகள், தனியார் பண்ணை வீடுகள் மற்றும் தனியார் வாடகை கட்டிடங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரையில் உள்ள லாட்ஜுகள், விடுதிகளில் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. இது தவிர அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மதுரையில் 10 இடங்களில் உணவு மையங்கள் அமைத்து 3 நேர சாப்பாடு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்ட தொண்டர்கள் எந்தெந்த உணவு மையங்களில் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் வரையறுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இது பற்றி முழு விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தகைய ஏற்பாடுகள் மூலம் மதுரை அ.தி.மு.க. மாநாடு உண்மையிலேயே வீரவரலாற்றின் எழுச்சியை நிஜமாக்கும் வகையில் அமையும் என்று கூறப்படுகிறது.
- மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன.
- இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்களை பங்கேற்க செய்ய அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களை திரட்டும் வகையில் தீவிரமாக பணியாற்றும் படி மாவட்ட செயலாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கி உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்தது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் தொண்டர்களை மதுரை மாநாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை மாநாட்டில் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் சந்திப்பில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகளும் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு வழங்குவது குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான 10 ஆயிரம் நபர்களுக்கு ஒரு கவுண்டர் வீதம் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கவும், நடமாடும் கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகின்றன. இரவு, பகலாக சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக நடைபெறும் மாநாடு என்பதால் இந்த மாநாட்டை சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடத்தி காட்ட அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். மாநாட்டில் 20-ந்தேதி காலை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடி ஏற்றி வைக்கிறார். மாலை 5 மணி அளவில் மாநாட்டு திடலில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மாநாட்டில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது.
மாநாட்டுக்கு தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு நான்கு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட உள்ளது.
எனவே மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் அமையும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
- டெல்லியில் சமீபத்தில் நடந்த பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படவில்லை.
- ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிப்பது யார்? என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பிரமாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்.
இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்களை திரட்ட கட்சியினர் தயாராகி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்தும் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் வகுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த மாநாட்டை திசை திருப்பும் நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலை இருவரும் கூட்டாக சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
அதே நேரத்தில் டெல்லியில் சமீபத்தில் நடந்த பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தங்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் நாளான வருகிற 20-ந்தேதி அன்று கொடநாடு எஸ்டேட் முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் சசிகலாவின் ஆதிக்கம் ஏற்பட்ட போது ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தர்ம யுத்தத்தில் ஈடுபட்டார்.
ஓ.பி.எஸ்.சின் இந்த தர்மயுத்தம் அவரது அரசியல் பயணத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது என்றே கூறலாம். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.
ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்து தற்போது மீண்டும் தர்ம யுத்தத்தை அவர் கையில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கொடநாடு தர்ம யுத்தம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எப்படி கைகொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பொது செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்முறையாக மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதுரை மாநாட்டில் ஏராளமான தொண்டர்களை திரள செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களை அதிகளவில் வாகனங்களில் அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10 லட்சம் பேருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையன்குளம் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மைதானம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டு திடலில் ஆங்காங்கே தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 250 கவுண்டர்கள் அமைத்து உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுண்டர்களிலும் 6 பேர் பணியமர்த்தப்பட்டு தொண்டர்களுக்கு உணவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தஞ்சை பகுதியில் இருந்து சுமார் 3,000 மூட்டை அரிசி மாநாடு திடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது தவிர உணவு அருந்துவதற்கு தேவையான தட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மைதானத்தில் 50 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் லாரிகள், மினி வேன்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் மாநாடு குழுவில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளும் மதுரையில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
எனவே மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பார்கள் என்றும், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்களும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் வகையில் மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு அமோகமாக நடைபெறும் என்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
- அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார்.
- மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக மாநாட்டு திடல் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்தவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாமல் மாநாட்டை சிறப்பாக நடத்தவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் வழங்கப்படுகிறது இதற்காக 250 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார். 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை தொண்டர்கள் புடை சூழ ஏற்றி வைக்கிறார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார்.
மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற பாடகர்களான செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பங்குபெறும் கவியரங்கம் மற்றும் அ.தி.மு.க. சாதனை விளக்க பேச்சரங்கம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுகிறார்கள். மதுரையில் நடைபெறும் இந்த அரசியல் மாநாடு அ.தி.மு.க.வின் வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் அமையும் மாபெரும் வெற்றி மாநாடாகவும் அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
- அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
- மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மதுரை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.
எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.
- இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது.
பழனி:
மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பொதுவாக அழைப்பிதழ் கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது தான், நீண்ட நெடுங்காலமாக நம்முடைய மரபாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஆனால் நேற்று அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் கொடுத்தபோது தாம்பூலத்தட்டில் வெற்றிலை பாக்குடன் தக்காளி பழங்களை வைத்திருந்தனர். இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. எட்டாக்கனியாக இருந்த தக்காளியுடன் கொடுத்த அழைப்பிதழை பொதுமக்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கினர்.
- வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டின் தொடக்க விழா பாடல் பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
சேலம்:
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந்தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார்.
இந்த மாநாட்டை மதுரை ரிங் ரோடு வலையங்குளம் கருப்பசாமி கோவில் எதிரில் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்பதால் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு இந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தயாராகி வருகிறார்கள். இதற்காக பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கட்சியினர் இடையே மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாகன பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டது. ரதம் போல தயார் செய்யப்பட்ட இந்த வாகனம் நேற்றிரவு சேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த வாகனத்தின் பிரசார தொடக்க விழா நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் இன்று காலை நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மதுரை பொன்விழா மாநாடு பிரசார வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனத்தில் வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20 மதுரை என்ற வாசகம் இலச்சினையுடன் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டின் தொடக்க விழா பாடல் இந்த பிரசார வாகனம் மூலமாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த பிரசார வாகனம் இன்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. பிரசார வாகனத்துடன் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட அ.தி.மு.க.வினர் 100 பேர் வாகனங்களில் செல்கிறார்கள்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வருகின்ற 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் விதமாக இந்த வாகனம் இயக்கப்படவுள்ளது.
இந்த பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், மாரியப்பன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், மண்டல துணைத் தலைவர் கவுரிசங்கர், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் கனகராஜ், மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
- இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ஜெயலலிதா பேரவை சார்பில் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விளம்பர லோகோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி விளம்பர லோகோவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் பொன்விழா எழுச்சி மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் 35 ஏக்கரில் உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டின் அனைத்து நகர்வுகளும் நாள்தோறும் எடப்பாடியாரின் தகுந்த வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டுக்காக மூன்று லட்சம் சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதனை தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெயிலில் வாடக்கூடாது என்று எடப்பாடியார் ஆணையின் படி கூடுதலாக வலது புறமும், இடதுபுறமும் தலா ஒரு லட்சம் சதுரடியில் பந்தல் போடப்பட்டு வருகிறது. ஏறத்தாழ ஐந்து லட்சம் சதுரடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இதுபோன்ற பந்தல் அமைத்ததில்லை.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட 40 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாகவும்,
சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும்,
தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாகனங்கள் வளையங்குளம் ரிங்ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அதிசயம் ஏழாக இருந்தாலும் எடப்பாடியார் உரையாற்றும் போது, இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும்.
பாராளுமன்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் கட்சத் தீவை தாரை வார்த்தது தி.மு.க. தான் என்று தி.மு.க.வின் துரோகத்தை அம்பலப்படுத்திவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சம்பவம் குறித்து கனிமொழி பேசிய போது, அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து அவமானப்படுத்திய சம்பவத்தை நினைவு கூர்ந்து, அவருக்கு நடந்த கொடுமையை, அவமானத்தை எடுத்துரைத்தார்.
புரட்சித்தலைவி அம்மா அப்போது நான் மீண்டும் சட்டசபைக்கு முதலமைச்சராக வருவேன் என்று சபதம் போட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை டெல்லியில் தோலுரித்துக் காட்டினார். பெண்கள் மீது பாசம் உள்ளது போல தி.மு.க. நாடகம் போடுகிறது. அம்மாவின் தைரியத்தை டெல்லியில் பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தைரியமாக எடுத்துரைத்தார்.
எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும் வகையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார்.
- சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூரில் மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ரவி, ஆவடிகுமார், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி,எஸ்.சங்கர், ஹேமேந்திரன், பிரகாஷ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வக்கீல் பார்த்தசாரதி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
- முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மதுரை:
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுப் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கேற்ப சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவாறு பந்தல் அமைக்கப்படுகிறது.
வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக விரிவான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் முக்கிய பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பணியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.
வருகிற 16-ந்தேதிக்குள் மாநாட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு வந்தார்.
இதற்காக இன்று அதிகாலை சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வினர் வந்தனர். மாநாட்டு திடலுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஐ.டி. பிரிவு ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வரவேற்றனர் .
இதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களிடம் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாநாட்டில் மேடை மற்றும் பந்தல் அமைப்பு, பார்க்கிங் வசதி, சமையல் கூடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பான வரைபடத்தை முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர்.
அப்போது அவரும் அதை பார்த்து மாநாட்டு பந்தல் மற்றும் சமையல் கூடங்கள் அமைய உள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்தார். மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யவும், மாநாட்டுக்கு வருபவர்கள் நெரிசலில்லாமல் செல்லவும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாநாட்டு திடலில் இருந்த எடப்பாடி பழனிசாமி கப்பலூர் பகுதிக்கு சென்று காலை உணவு அருந்திய பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.