search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதை பணிகள்"

    • இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
    • ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான குமரி மாவட்ட மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாநி லத்தின் தலைநகரமான சென்னைக்கும் பிற ஊர்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு ரெயில் சேவை மிக முக்கியமாக உள்ளது.

    ஆனாலும் இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் இருக்கின்ற ரெயில்களும் கிராசிங்கிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும் நிலை நிலவுகிறது.

    இந்த நிலையை மாற்ற மதுரையிலிருந்து நாகர்கோ வில் வரையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது இதில் மதுரை-திருநெல்வேலி இடையேயான பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

    தொடர்ந்து திருநெல்வேலி- நாகர்கோவில் இடையேயான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக முதல் கட்ட மாக பாலங்கள் கட்டப் பட்டன.தொடர்ந்து தண்டவாளங்களை அமைப்ப தற்காக மண் சீர மைக்கப்பட்டு அதன் மீது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் பெரும் பாலான இடங்களில் முடிந்து விட்டன. தற்போது ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. மேலும் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணியும் இந்த பாதையில் நடந்து வருகிறது.

    தோவாளை- நாகர்கோ வில் சந்திப்பு ரெயில் நிலை யம் இடையே உள்ள பழை யாற்று பகுதியில் ஏற்கனவே ஒரு பாலம் இருந்த அளவில் தற்போது மேலும் மூன்று பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் மற்ற 2 பாலங்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யத்திற்கு ரெயில்கள் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் தற்போது கருங்கல் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும் நாகர்கோவில் சந்திப்பு ெரயில் நிலையத்தில் இட நெருக்கடி உள்ளதால் நடைமேடை விஸ்தரிப்பு பணியும், முனைய விரி வாக்க பணியும் தொடங்க ப்பட இருக்கிறது.

    இந்த பணியை முழு வீச்சில் செய்து முடிக்க ெரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. திருநெல்வேலி வழித்தடத்தில் மேலும் 2 தண்டவாளங்கள் அமைந் தால் ெரயில்கள் தாமதம் இன்றி செல்ல வழி வகுக்கும். இதே போல் நாகர்கோவில் கன்னி யாகுமரி இடையேயான இரட்டை ெரயில் பாதை பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    சாமிதோப்பு, சுசீந்திரம், அகத்தீஸ்வரம், வடக்கு தாமரை குளம் போன்ற பகுதிகளிலும் ஜல்லிகள் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு ெரயில்வே பொது மேலாளர் நேரில் ஆய்வு செய்தார். அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து இந்த பணிகள் மேலும் வேகம் எடுத்துள்ளன.

    இதனால் இரட்டை ெரயில் பாதை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே விரை வில் நாகர்கோவில்- கன்னியாகுமரி- திருநெல்வேலி இரட்டை ெரயில் பாதை பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ெரயில் சேவை தொடங்கும் பட்சத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயண நேரம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

    ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    ×