என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புராணக்கதைகள்"
- ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
- இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.
பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பழமையான பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சவுந்தரர்யவல்லி தாயார் சமேதய ஸ்ரீ பேட்டராய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி), ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராய் அருள்பாலிக்கிறார்.
தென் திசையில் ஸ்ரீ சவுந்தர்யவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளார்.
ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகர், ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால் சாமி, சீதாலட்சுமண சமேத ஸ்ரீ ராமபிரான், வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் மற்றும் மலைக்குகையில் ஸ்ரீ கஜலட்சுமி நரசிம்மர் சந்நதிகளும் உள்ளன.
ஸ்ரீ ராமபிரான் 3 நாட்கள் வசித்த திருத்தலம்.
இதனால் இத்திருத்தலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் ஆகும்.
சகல தீவினைகளையும் போக்கி நல்ல சுகபோகங்களையும் அள்ளித் தருகிறார்.
இக்கோவிலின் பிரகாரம் 235 அடி அகலம் உள்ளவை.
தெற்கு மதிலின் நீளம் 204 அடியாகும். கிழக்கு மதிலின் நீளம் 244 அடியாகும்.
கோவிலின் தலைவாசல் கிழக்கு திசையை நோக்கி உள்ளது.
எம்பெருமான் திருப்பதி கோவிலில் உள்ளபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் முக்கியமான நான்கு திவ்ய தேசங்களான கோவில் ஸ்ரீரங்கம், திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில் (காஞ்சி), திருநாராயணபுரம் (மேல்கோட்டை) ஆகும்.
இந்த நான்கு திவ்ய தேச சம்பந்தமும் ஒருங்கிணைந்த ஒரே சேத்திரம் டெங்கனிபுரம் ஆகும்.
இக்கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்யும் பூஜைகளை போலவும்பஞ்சராத்ர ஆகம முறைப்படி பூஜைகளும் ஆராதனைகளும் இங்கு பெருமாளுக்கு ஏக்கார்த்தி, கும்பார்த்தி, தேரார்த்தி ஆகிய ஆரத்திகள் எடுக்கின்றனர்.
இந்த ஆகம பூஜைகள் பரம்பரையாக நடந்து வருகிறது.
இக்கோயிலில் மூலவர் திருமலை வேங்கடவன் வேட்டையாடி வந்து நின்ற கோலத்தில் நிலைத்துள்ளார்.
உற்சவ மூர்த்தியாக காஞ்சிபுரம் வரதராஜர் பேட்டராய சுவாமியாக அருள் பாலிக்கிறார்.
திருநாராயபுரம் ஆயி சாமிகள் மங்கலாசனம் செய்து மணவாள மாமுனிகளை சந்தித்த சேத்திரம்.
இங்கு உகாதிபண்டிகை (தெலுங்கு வருட பிறப்பு) ஆன பின் 11 நாட்களில் பூரம் நட்சத்திரத்தில் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
தேர்த் திருவிழாவிற்கு முன்பு கருட பிரதிஷ்டை நடைபெறும்.
அப்போது குழந்தை இல்லாதவர்கள் சுவாமியை மனம் உருகி வேண்டி பிரசாதம் வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
இதனால் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியின் போது ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் வாங்குவது பரம்பரையாக நடந்து வருகிறது.
- வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர்
- கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.
வாஸ்து பிரச்சினைகளை தீர்க்கும் வெள்ளித் திருப்பூர் பளிங்கீஸ்வரர்
வெள்ளித் திருப்பூர் ஸ்ரீபளிங்கீஸ்வரரர் கோவில் சுமார் ஆயிரத்து இரு நூறு ஆண்டுபழமை மிக்கது.
பளிங்கீஸ்வரரின் கோவிலுக்கு செல்லும் வழியில் முனியப்பன் சன்னதி மிகக் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றது.
வீண் சண்டை, சச்சரவுகள் நேராமல்,பஞ்சமும், நோயும் அண்டாமல் ஊரைக் காப்பவர் இவர் என்கிறார்கள்.
பளிங்கீஸ்வரர் கோவிலுக்கோ, செல்லியாண்டியம்மன் ஆலயத்திற்கோ செல்வதற்கு முன், முத்து முனியப்பரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பது தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது.
பளிங்கீஸ்வரரின் சுற்றுப்பிரகாரம் மிகப் பெரியது பிராகார வெளிச்சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டவை.
கி.பி. 1265 ல் "கூனப்ப பாண்டியன்" என்ற மன்னன் இந்த கோவிலை மேம்படுத்தியதை விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர், லட்சுமி, குபேரர் மூலம் அறிய முடிகிறது.
அலங்காரம் பளிங்கீஸ்வரர் கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்வது சிறப்பாக கருதப்படுகிறது.
பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து வந்து இறைவன் இறைவியை வணங்கிவிட்டு இந்தத் திருக்கோவிலிலேயே நிச்சயத்தை நடத்துகின்றனர்.
வாஸ்து தோஷம் காரணமாக இல்லத்தில் ஏற்படும் பிரச்சினைகள், திருமணத் தடைகள் விலகவும் பளிங்கீஸ்வரரின் சன்னதியில் அர்ச்சனை செய்து பிரார்த்திக்கிறார்கள்.
- மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இங்கு வந்தனர்.
- இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.
மனைவியை விரட்டினால் தண்டனை தரும் லால்குடி சப்தரிஷிஸ்வரர்
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லால்குடி.
இங்கு பழம்பெரும் சிறப்புமிக்க ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
மனைவி மீது கோபப்பட்டு, மாமனார் வீட்டுக்கு விரட்டி விட்ட ஆண்களுக்கு தண்டனை தரும் கோவில் இது என்கிறார்கள்.
மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்த ஊர்பக்கம் வந்தார்கள்.
அப்போது திருவத்துறை ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் கோவில் கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகு படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
அதனைக் கவனித்த மகாலிக்காபூர் அருகில் இருந்த தளபதியிடம் உருது மொழியில்," அது என்ன லால் (சிகப்பு) குடி (கோபுரம்)?.." என்றான். அச்சொற்றொடரே லால்குடி என்று மாறி விட்டது.
இந்த கோவிலில் மிகப்பழமையான கோவில். மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி.
சப்தரிஷிகளான அத்தரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீ சப்தரிஷிஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது.
இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.
மாரிசி மகரிஷியின் பேரன் தான் சூரியன் அத்திரியின் மகன் தான் சந்திரன், சந்திரனின் மகன் புதன், அங்கீசரின் மகன் குரு, வசிட்டரின் வழி வந்தவர்தான் செவ்வாய்.
எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள லிங்கத்தின் மேல் வரி வரியாய் பள்ளங்கள் காணப்படுகின்றன.
தாரகா சூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள்.
சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.
அதன் பொருட்டுத்தான் சூரனை அழிக்க முருகன் பிறந்தார்.
அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர்.
அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம் பாலகனாக உள்ள முருகனை கொண்டு வந்து அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.
ரிஷி பத்தினிகள் அதிசயமாய் அந்தக் குழந்தையைப் பார்த்தனர்.
பால குமாரன் லேசாய் அழத் துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.
குழந்தைக்கு பசி ஏற்பட அழுகை அதிகரித்தது.
ரிஷிபத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கிப் பரிவோடு தாலாட்டிப் பாலூட்டினார்கள்.
வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர்.
சிவனின் வாரிசுக்குப் பால் கொடுத்ததால் எவ்வளவு பெரும் பாக்கியம், காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே.
அந்த நல்ல வாய்ப்பைப் கெடுத்து, அந்தப் புகழைக் கார்த்திகைப் பெண்களுக்குக் கொடுத்து விட்டீர்களே என்று மனைவியரை அடித்து விரட்டினர்.
முருகப் பெருமான் தனது அவதார காரணத்தை உணர்ந்தார்.
தாராகா சூரனைக் கொன்று போட்டு, வெற்றி வீரராய்த் திரும்பிக் கொண்டிருந்தபோது, சப்தரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார்.
அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார்.
நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர்., பலன் கிடைக்கவில்லை.
பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவும் புரிந்தனர்.
கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்குப் பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு கடும் தவம் இருந்தனர்.
இதையடுத்து சிவன் ஆண்களுக்கு சாப விமோசனம் தரும் தலமாக இது கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்