search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற தீர்ப்பு"

    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.
    • முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வில் நிறை வேற்றப்பட்ட தீர்மா னங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று சிவகங்கையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அந்த கட்சியி னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முன்னதாக பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள், ஸ்டிபன் அருள்சாமி, கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவசிவஸிதர், மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், நகர துணை செயலாளர் மோகன், புலியடிதம்பம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் பாபு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ண குமார், தாமு முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×