search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குட நன்னீராட்டு பெருவிழா"

    • காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை காலை வெகு விமரிைசயாக நடக்கிறது.
    • பாதுகாப்பு பணிகளை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின் தலைமை யில் போலீசார் செய்து வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அருள்பா–லித்து வரும் கொப்புடைய–நாயகி அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளை (4-09-2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி நகரின் தென்பகுதியாம் செஞ்சை சங்கராபுரம் என்ற கிராம பகுதியில் இருந்து வரும் காட்டம்மன் கோவிலில் எழுந்தருளி விக்ரமாக இருந் ததை இங்கு கொண்டு வந்து ஸ்தாபித்ததாக தெரிய வருகிறது. அக்காலத்தில் ஆண்டு வந்த அரசன் அன் றாடமும் தன் வழிபாடு முறைகளையும் வரவு-செலவு மற்றும் அலுவல்க ளையும் கொப்புடையாளி டம் ஒப்புவித்து வந்தான் என்பது செவிவழி செய்தியா கும்.

    அம்மனின் காதில் கொப்பு எனும் காதணியை அணிந்திருந்த காரணமாக கொப்புடையாள் என அழைக்கப்பட காரணமா யிற்று. காரைக்குடியின் காவல் தெய்வமாக அருள் பாலித்து வரும் கொப்புடை யம்மன் கோவிலில் 1975, 1989, 2008 ஆம் ஆண்டுகளில் திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டு செய்யப் பெற் றுள்ளது.

    தற்போது பல அறக்கொ டையாளர்களின் உபயத் தால் திருப்பணி செய்யப் பட்டு கடந்த புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு யாககால பூஜைகளுடன் தீபாராதனைகள் காட்டப் பட்டு நாளை சீரும் சிறப்பு மாக கொப்புடையம்ம னுக்கும், பரிவார மூர்த்திக ளுக்கும் திருக்குட நன்னீ ராட்டு நடைபெற உள்ளது.

    சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கும்பாபிஷேக விழாவிற்கான பணிகளை ஆய்வுசெய்து பக்தர்களுக் கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்ய ஆலோசனை வழங்கினார். நகர்மன்ற தலைவர் முத்து துரை கோவில் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் வச திக்காக பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.

    திருக்குட நன்னீராட்டு பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பழனிக்கு மார், தக்கார் ஞானசேகரன், உதவி ஆணையர் செல்வ ராஜ், செயல் அலுவலர் மகேந்திரபூபதி, ஆய்வர் பிச்சுமணி, நாட்டார், நக ரத்தார்கள், திருப்பணிக்கு ழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் திருமடங்க ளின் தலைவர்கள், அமைச் சர்கள், சட்டமன்ற, பாரா ளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பாதுகாப்பு பணிகளை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின் தலைமை யில் போலீசார் செய்து வருகின்றனர்.

    ×