search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரமணியம் பத்ரிநாத்"

    • போட்டி துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது.
    • ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட போதிலும், முதல் பாதி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

    போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி 15 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்து, ரோகித் ஷர்மா கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்ப்களை பதம்பார்த்தது.

    இவர் அவுட் ஆன புகைப்படம் இணையத்தில் வெளியானதும், கோலிவுட்டில் ரிலீசான சென்னை 600028 படத்தில் வெளியான காட்சியை போன்றே இருக்கிறது. இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக, அதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.

    ×