search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு வார்டுகள்"

    • 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • வெப்பவாதம் சம்பந்தமாக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் வெப்ப வாதம் மற்றும் வெப்ப தாக்கத்தால் ஏற்படும் எதிர்பாராத நோய்களை பொதுமக்கள் சந்திக்க நேரிடும்.

    எனவே பொதுமக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்துள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

    வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட் டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிளும் மேற் கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெப்பம் சம்பந்தமாக ஏற்படும் நோய் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. தேவையான மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகள், பொதுமக்கள் இலவசமாக ஓ.ஆர்.எஸ்.கரைசல் குடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பஸ், ரெயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் என 1000 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மருத்துவமனை களில் 10.37 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பில் உள்ளன. மேலும் கோடை காலம் நிறைவடையும் வரை தடையின்றி வழங்க ஏதுவாக கூடுதலாக 88.77 லட்சம் பாக்கெட்டுகள் கேட்டுள்ளோம்.

    மருத்துவமனைகளில் பாதுகாப்பான குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்பு லன்சுகளிலும் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கு உதவ ஐஸ் ஜெல் பாக்கெட்டுக்கள், ஐஸ் பெட்டிகள், தார்பாலின் ஆகியவற்றை தயாராக வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    வெளியே செல்பவர்கள், வெயில் நேரத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை, தேனி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:-

    ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை அந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.

    இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கென சிறப்பு அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்களும் இருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×