என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தவிர்ப்பது"
- பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
- பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்வாரிய அதிகாரி தகவல்
- மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரியில் பருவமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வபோது பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பி கள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் இழுவை கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.
இடி, மின்னலின்போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன் படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்மாற்றிகள், மின்ப கிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக் கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் பழுதடைந்த நிலையில் உள்ள சுவிட்ச் மற்றும் பல்புகளை உடனடி யாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளில் இ.எல்.சி.பி./ஆர்.சி.டி. பொருத்தி மின்விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. மின் நுகர்வோர்கள் பழுதடைந்த நிலையில் காணப்படும் சர்வீஸ் வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் பொழுது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.
வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரி செய்ய முயற்சிக்கக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து மின்சாரம் மிகவும் தேவையானது. அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் உப யோகித்து மின் விபத்துகளை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்