search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாமகம்"

    • பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
    • கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்

    1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்

    2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்

    3. யம தீர்த்தம் -யம பயமில்லை

    4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்

    5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்

    6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்

    7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்

    8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்

    9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்

    10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்

    11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்

    12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்

    13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்

    14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்

    15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்

    16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்

    17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்

    18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்

    19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.

    • மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
    • அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.

    அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.

    தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.

    ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.

    இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.

    • அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.
    • அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

    இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.

    இறைவன் பெயர் அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

    பிரளயத்தின் பொழுது சிவபெருமான் வேட உருவம் தாங்கி அமுத கலசத்தை உடைத்த பொழுது அந்தக் கும்பத்திலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியது.

    அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

    இதனால் இத்தலத்திற்கு நாளிக்கேசர் என்று பெயர் சூட்டப்பட்டது (நாளி என்றால் சமஸ்கிருதத்தில் தென்னை மரத்தைக் குறிக்கும்).

    இத்தலத்தில் இறைவன் முதலில் கிழக்கு நோக்கித்தான் இருந்தார்.

    மகாமகக்குளத்தில் மகாமக தினத்தன்று நீராட நவ புண்ணிய நதிக் கன்னியர்கள் வந்த பொழுது,

    அவர்களுக்குத் தரிசனம் தர வேண்டி மேற்குத் திசையில் காட்சி கொடுத்தருளினார்.

    இதனால்தான் இங்குள்ள இறைவன் பின்னர் அபிமுகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

    எந்த புண்ணிய தலத்திற்கும் சென்றும் தீராத குஷ்ட நோயை "சுமதி" என்ற பெண்ணுக்கு இங்குள்ள இறைவன் அந்த நோயைத் தீர்த்தார் என்பதால்

    அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.

    • அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.
    • நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில்தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது.

    இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார்.

    அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவ கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    ×