search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுக்குறிப்பு"

    • வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம்.
    • கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    வழக்கமாக கூந்தலுக்கு எண்ணெய் அவசியம். ஆனால் எல்லா நேரங்களிலும் எண்ணெய் தேய்க்கலாமா என்றால், அதிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    எண்ணெய் வைத்தவுடன் சீப்பு போடுவது

    பெண்கள் வழக்கமாக, கூந்தலில் உள்ள சிக்குகளை நீக்க, கூந்தலுக்கு எண்ணெயிட்ட பிறகு சீப்பை பயன்படுத்தி வாருவது இயற்கையானது. ஆனால் இது ஒரு பெரும் தவறு, அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

    அதே மாதிரி, நல்ல எண்ணெய் மசாஜ் செய்த பிறகு, சீப்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலையில் உள்ள கூந்தல் உடையக்கூடியதாக மாறும். அதாவது, கூந்தலுக்கு எண்ணெய் வைத்தவுடன் கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது உடைப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலுக்கு சீப்பு வேண்டும் என்றால், மெதுவாக உச்சந்தலையில் இருந்து கீழ்நோக்கி சீவலாம்.

    இரவு முழுவதும் கூந்தலில் எண்ணெய் வைத்திருப்பது

    பெரும்பாலான இந்திய பெண்கள் செய்யும் மற்றொரு பொதுவான தவறு, இரவு முழுவதும் உச்சந்தலையில் எண்ணெயை வைத்திருப்பது. இது உங்கள் கூந்தலை கிரீஸ் மற்றும் பிசுபிசுப் தன்மை கொண்டதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் படுக்கை மற்றும் தலையணையில் இருந்து அழுக்குகளையும் சேகரிக்கும்.

    இந்த அழுக்கு உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களுடன் எளிதில் கலந்துவிடும் மற்றும் உச்சந்தலையில் சிக்குகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, உங்கள் கூந்தலில் அதிக நேரம் எண்ணெய் விடாதீர்கள்.

    கூந்தல் ஈரமாக இருக்கும்போது எண்ணெய் தேய்ப்பது

    சில பெண்களுக்கு ஈரமான கூந்தலுக்கு எண்ணெய் பூசும் பழக்கம் உள்ளது. இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். உங்கள் கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைமுடியின் வேர்க்கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

    மேலும் மென்மையான சிக்கு மற்றும் இழுப்பது கூட முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கூந்தலை பாதுகாக்க, முதலில் உங்கள் கூந்தலை உலரவிட்டு, பின்னர் எண்ணெயை பயன்படுத்துங்கள்.

    அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்துதல்

    உலர்ந்த கூந்தல் மற்றும் உச்சந்தலையாக இருந்தாலும், அதிகப்படியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் கூந்தலுக்கு தேவைப்படுவதை விட அதிகமாக பயன்படுத்த வேண்டாம். எண்ணெயில் இருந்து விடுபட உங்களுக்கு நிறைய ஷாம்பு தேவைப்படும், இது உங்கள் கூந்தலை பராமரிக்கும். அதன் இயற்கையான பாதுகாப்பு எண்ணெய்களை எடுத்துக்கொள்ளும்.

    கூந்தலை மிகவும் இறுக்கமாக கட்டுவது

    முன்பு குறிப்பிட்டபடி, உச்சந்தலை கூந்தல் தளர்வானதாக இருப்பதால், எண்ணெய் வைத்தப் பிறகு, உங்கள் கூந்தலின் மயிர்க்கால்கள் பாதிக்கப்படக்கூடியதாகவும் உடையக்கூடியதாகவும் மாறும். அதனால், உங்கள் கூந்தலை இறுக்கமாக அல்லது பின்னலில் கட்டுவது வேர்களை பலவீனப்படுத்தி கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும். ஒரு தளர்வான குறைந்த போனிடெயில் கட்டவும்.

    • ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் உள்ளன.
    • சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன.

    ஒயின் ஃபேஷியல், ராப், எக்ஸ்ஃபோலியண்ட், குளியல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய அழகு சிகிச்சை முறை வந்துள்ளது. அதன் பெயர் ஒயினோதெரபி என்கிறார்கள். இவற்றில், ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், மற்ற எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமைத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

    சிவப்பு திராட்சையின் விதைகள், தோல், இலைகள் ஆகியவற்றில், ஆண்டோசயனோசைட்ஸ், பாலிஃபீனால், பிரோசயனோடல்ஸ் போன்ற உட்பொருள்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஈயைவிட அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் உள்ளன. கொலாஜன், எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டமைப்பதன் மூலம் முதுமையை ஒயின் தடுப்பதாக கூறப்படுகிறது. இவை சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன. சருமத்துக்கு இதமளித்து, இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.

    ஒயின் ஃபேஷியல்:

    முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும்.

    ஒயின் ஸ்கிரப்:

    இது குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படும், கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும்.

    ஒயின் மாஸ்க்:

    எசன்ஷியல் ஆயில்களைக் கொண்டு லேசான முழு உடல் மசாஜ். பின்னர், பழங்கள், சாக்லெட் கொண்டு ஒயின் பேஸ்ட்டால் ராப் செய்யப்படும்.

    • பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது.
    • எளிய பொருட்களை வைத்தே பொடுகை எளிதாக விரட்டி விடலாம்.

    பொடுகு வெளியே வெள்ளைநிறத்தில் உதிரும் வகை , மற்றொன்று மண்டைப்பகுதியில் மெழுகு மாதிரி படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியா வகை என இரண்டு வகை உண்டு. இவற்றில் உங்களுக்கு எந்தவிதமான பொடுகு என்றாலும் அதில் இருந்து நிவாரணம் பெற எளிய சிகிச்சை ஒன்று உள்ளது.

    பொடுகு மருத்துவ ரீதியாக செபோரியா என்று அழைக்கப்படுகிறது. இதை எப்படி போக்கலாம் என தெரியாமல் பலரும் குழம்புகிறார்கள். பொடுகின் முதல்கட்டமாக இருந்தால் நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக விரட்டி விடலாம்.

    அதற்கு வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும்.

    முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் மாதிரி செய்து உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் கழுவினால் பொடுகு நீங்கிவிடும்.

    இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த விழுதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.

    இந்த முறைகளை வாரத்துக்கு ஒரு தடவை செய்யலாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது.
    • வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேல் தடவி வரலாம்.

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை, சருமத்தில் மெலனின் அதிகமாக இருப்பது, ரத்தசோகை, சிகரெட், மது பழக்கம், மன உளைச்சல், அடிக்கடி ஹேர்டை பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் ஏற்படும்.

    இரண்டு கண்களுக்கும் கீழ் கருமை வந்தால் பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். அவை பலன் அளிக்காவிட்டால் சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தியுங்கள். ஆனால் ஒரு கண்ணுக்கு கீழே மட்டும் கருமை வந்தால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள்.

    கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

    1) கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை ஒற்றி எடுங்கள் 2) தூங்கும்போது தலையை சற்று தூக்கி வைத்துப்படுங்கள். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது குறையும்

    3) போதுமான நேரம் நன்றாகத் தூங்குங்கள்

    4) மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தவும்

    5) சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள். குளுமையை உண்டாக்கும் கிரீம்களைத் தடவிக் கொள்ளுங்கள்

    6) வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேலே தடவி ஒத்தடம் இடுங்கள்

    7) ஆரோக்கியமான, சத்தான உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது. எனவே கவலைப்படாதீர்கள். வீட்டு வைத்தியம் பலன் தராவிட்டால் உடனே சருமநோய் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சிறந்தது.

    • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருமையையும் போக்கும்.
    • முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

    கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகின் நன்மைகள் பற்றி தெரிமா? கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் ரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது கிரீன் டீயாகத் தான் இருக்க முடியும்.

    பலரிடம் கிரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, "கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.

    கிரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயிக்கத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த கிரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

    கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

    பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்சின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்சின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

    கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின், இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

    எப்போது சருமத்தில் டாக்சின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்சின்களை முற்றிலும் போக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

    • கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும்.
    • தக்காளி ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது.

    இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய் பசையும் சேர்ந்து அடைபட்டு போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.

    பருக்கள் வந்தால் அதை தொடாதீர்கள், உடைக்காதீர்கள், கிழிக்காதீர்கள் அப்படி செய்தால் தோள்களில் உள்ள கொலாஜன் என்னும் செல்கள் இறந்து பெரிய குழி மற்றும் தழும்பாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

    கொலாஜன் செல்களை உயிர்பிக்க ஆவிபிடிக்க வேண்டும். பின்னர் முகத்தை 5 நிமிடம் கைகளால் நன்றாக மசாஜ் செய்து லகுவாக்க வேண்டும்.

    தக்காளி, முல்தானிமட்டி, ரோஸ்வாட்டர் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து ஒன்றாக அரைத்து குளைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனைத் தொடர்ந்து 30 நாட்கள் முகத்தில் தடவி வரும்போது பருக்கள், தழும்புகள் மறைவதைக் காணலாம்.

    தக்காளியில் உள்ள ஆண்டிஆக்ஸிடெண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆண்டி ஏஜிங் செல்களை உயிர்பிக்க உதவுகிறது.

    தினமும் 4 லிட்டர் சீரக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏபிசி ஜூஸ் குடிக்க வேண்டும். மேலும் ஐஸ் கியூப்களை கொண்டு தினமும் இரண்டு நிமிடம் மசாஜ் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது முகத்துக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.

    வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.

    பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்கு பதில், தினசரி குளிக்கப் பயன்படுத்தினால் பருக்கள் மறைந்து முகம் பொலிவுபெறும்.

    முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

    • கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
    • எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள் கண்டிஷனரை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் என்பது நம் கூந்தலை எண்ணெய் தன்மையுடன் வைத்து வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் பசை இல்லாத கூந்தலின் பகுதிகளில் மட்டும் கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டும் போதும்.

    அதிக எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், அல்லது பொடுகு பிரச்சினை உள்ளவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் வாங்கும் போது உங்களது கூந்தலின் உறுதித்தன்மையை மனதில் வைத்து டிபாட்மெண்ட் ஸ்டோர்களிலோ அல்லது காஸ்மெடிக் கடைகளில் வாங்குவது நல்லது.

    அவகேடோ பழத்தின் சதை பகுதியை ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு கூந்தலில் மட்டும் படும்படி தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கூந்தலுக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூந்திக்கொட்டையை எடுத்து குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரை ஒவ்வொருமுறை ஷாம்பு வாஷிற்கு பிறகும் கூந்தலை இந்த தண்ணீரில் அலசி வர வேண்டும். இது இயற்கையாகவே கண்டிஷனர் போல் உங்களது கூந்தலை பாதுகாக்கும்.

    ஒரு ஸ்பூன் வினிகரை கால் கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த தண்ணீரையும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த வினிகர் கலந்த தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    • கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம்.
    • வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள்.

    அழகிலும், ஆரோக்கியத்திலும் முன்னோடியாக இருக்கும் கொரிய நாட்டு பெண்களின் ஆரோக்கிய ரகசியம் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இளைஞர்கள், இளம்பெண்கள், வயதான தாத்தா, பாட்டியாக இருந்தாலும் உடலை மிகவும் ஸ்லிம்மாகவே வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உணவுமுறைதான், அப்படி அவர்கள் என்ன ரகசிய உணவுமுறையை பின்பற்றுகிறாரார்கள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

    டயட் என்ற பெயரில் எந்த உணவினையும் ஒதுக்கி வைக்காத கொரிய பெண்கள் புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான கொரிய உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

    ஆனால் உணவுகளின் அளவில் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் அளவாகவே சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.

    கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம். ஆம் காய்கறிகளை அதிகமாக விரும்பும் இவர்களின் உடல் எடையை ஸ்லிம்மாக வைத்திருக்கின்றதாம்.

    இவர்களின் பெரும்பாலான காய்கறிகள் நார்ச்சத்துள்ளவை, ஆரோக்கியமானவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை என்பதால், இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

    கொரியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள். தங்கள் உடலுக்கு நல்ல உணவுகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் அதற்கேற்ப ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள்.

    இவர்களின் முக்கிய உணவாக கடல் உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆம் ஆரோக்கியத்திற்கு சிறப்பான கொழுப்பு நிறைந்த மீன்களைத் தவிர, கடற்பாசி ஒரு பொதுவான கொரிய உணவுப் பொருளாகும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கடற்பாசியில் நிறைய நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்திற்கும், நீண்ட காலம் இளமையாகவும் வைக்கின்றதாம்.

    ஆதலால் கடற்பாசியினை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் சேர்க்கப்பட்டு இவர்கள் சாப்பிடுகிறார்களாம்.

    இறுதியாக கொரிய மக்களைப் பொருத்த வரை எங்கு சென்றாலும் நடப்பதையே விரும்புகின்றனராம். ஆம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதை விட, காலால் நடந்தே செல்வதை தான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும்.
    • குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது.

    சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை 'கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

     முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.

    அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

    கடலை மாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.

     எலுமிச்சையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.

    ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும்.

    குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.

    இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது. பொலிவிழந்த சருமம் இளமை பெறும்.

    ×