என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடை விதிப்பு"
- இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
- போலீசாருக்கு ஆதரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் உள்ள பூக்கடை உரிமையா ளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெய ரில் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு மேல் எந்த பூக்கடைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அன்றைய தினம் அவர் மட் டுமே பூ வியாபா ரம் செய்து கொள்வார்.
இவர் மட்டும் விற்பனை செய்வதால் அதிக விலைக்கு பூமாலைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும் இது பொதுமக்க ளிடையே மிகுந்த மன வேத னையை அளித்து வந்தது. இதுதொடர்பாக நடவ டிக்கை கோரி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியா னது.
இதன் எதிரொலியாக தேவகோட்டை டி.எஸ்.பி. பார்த்திபன், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி, நமச்சிவாயம் மற்றும் போலீசார் பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் 25-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுதா தலைமை யில் பொதுமக்கள் இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப் பட்டது.
கூட்டத்தில் இன்ஸ்பெக் டர் சரவணன் பூக்கடை உரி மையாளர்களிடம் குத்தகை கடையால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின் றனர். மார்க்கெட் நிலவரப் படி அன்றாடம் பூ விற்பனை செய்து கொள்ளலாம். பொது மக்களின் கோரிக்கை ஏற்று இனிவரும் காலங்களில் பூ வியாபாரிகள் சங்கம் குத்தகை என்ற பெயரில் பூக்களை மொத்தமாக வாங்கி அதிக விலை நிர்ணயம் செய்து பொது மக்களை பாதிக்கும் வகையில் விற்பனை செய்ய கூடாது.
பூக்கள் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. அதை பதுக்குபவர் கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும். தனி நபர்களும் உதிரி பூக்களை விற்பனை செய்யலாம். தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ேமலும் போலீசாருக்கு ஆத ரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்