என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திங்கள்நகரில்"
- திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி
- தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
நாகர்கோவில் : திங்கள்சந்தை பறையன் விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). கூலி தொழிலாளி. நேற்று மாலை சுமார் 3.45 மணியளவில் ராஜூ திங்கள்நகர் ரவுண்டானா நெய்யூர் ரோட்டில் உள்ள ஒரு ஹார்டுவேர்ஸ் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்யூர் மிஞ்சன்தெருவை சேர்ந்த தனபால் (37) என்பவர் குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ராஜூ பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனபால் அவதூறாக ராஜூவை பேசியுள்ளார். இதை ராஜூ தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ராஜூவை குத்தி உள்ளார். இதில் ராஜூ பலத்த காயம் அடைந்தார். மேலும் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயம் அடைந்த ராஜூவை அங்கி ருந்தவர்கள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச் சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜூவின் சகோதரர் ஜெகதீஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய தனபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்