என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பதி பெருமாள் கோவில்"
- புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- பக்தர்களுக்கு லட்டு ,துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோட்டில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை ,மடத்துக்குளம் ,பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் பக்தர்களுக்கு லட்டு ,துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் ,அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்