search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் வீர வணக்க நாள்"

    • தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
    • மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்!

    தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!

    அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக டிஜிபி மலர் வளையம் வைத்து மரியாதை
    • மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து மரியாதை

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின்போது துணிச்சலாக எதிரிகளை எதிர்கொண்டு உயிரிழந்த போலீசாரின் வீரத்தை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநகர் மனோஜ் சின்கா, ஸ்ரீநகரில் காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்டார்.

    மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ''சிறந்த வியூகம் மூலம் உத்தர பிரதேச மாநில போலீஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்தி, குற்றத்தை முறியடித்துள்ளது. திருவிழாக்கள், முக்கியமான நிகழ்ச்சிகள், அரசியல் பேரணி உள்ளிட்ட பேரணிகள் அமைதியாக நடைபெற்றுள்ளன'' என்றார்.

    தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    ×