search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரோலினா மரின்"

    • கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
    • 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.

    இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் செட்டை பிவி சிந்து இழந்த நிலையில், 2-வது செட்டை கைப்பற்றினார்
    • பிவி சிந்து செட்டை இழந்ததும் கரோலினா நீண்ட நேரம் சந்தோசத்தை கொண்டாடினார்

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் மோதினர்.

    முதல் செட்டை கரோலினா வென்றார். 2-வது செட்டை பிவி சிந்து கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.

    இந்த போட்டியின்போது பிவி சிந்துவும், கரோலினாவும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இருவரும் இதற்கு முன் பல போட்டிகளில் மோதியுள்ளனர். அப்போது தோழமையாகவே இருந்துள்ளனர். இந்த போட்டியில் மோதிக்கண்டது அரியதாக பார்க்கப்படுகிறது.

    இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரித்தார்.

    கரோலினா ஒரு சர்வீஸை வென்றதும் நீண்ட நேரம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக பிவி சிந்து கோபம் கொண்டார். சர்வீஸ் செய்ய பிவி சிந்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக கரோலினா குற்றம்சாட்டியதால் வார்த்தைப்போர் ஏற்பட்டது.

    ×