search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "62 அடியை எட்டிய ைவகை அணை நீர்மட்டம்"

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், குளம், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
    • தற்போது வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை இடுக்கி மாவட்டம், தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது.

    தற்போது வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 61.78 அடி நீர்மட்டம் இருந்தது. விரைவில் 62 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1820 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.25 அடியாக உள்ளது. 2033 கனஅடிநீர் வருகிறது. 1333 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 36 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 60.4, தேக்கடி 2.4, சண்முகாநதிஅணை 1.2, வைகை அணை 7, மஞ்சளாறு 4.1, பெரியகுளம் 17 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×