என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போதையிலேயே வைத்திருப்பதுதான் திராவிட மாடல்"
- தமிழகத்தில் ஒரு ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அது தி.மு.க. தான்.
- அதில் 99 சதவீத வாக்கு றுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கொஞ்சம் கூட கூசாமல் ஒரு பொ ய்யான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூ ட்டம் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. தேன்மொழி எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, முன்னாள் எம்.பி. உதயகுமார், நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரு மான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசிய தாவது:-
தமிழகத்தில் ஒரு ஆட்சி எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அது தி.மு.க. தான். தேர்தல் பரப்புரையில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வாக்குகளை திமு.க.வினர் பெற்றனர்.
அதில் 99 சதவீத வாக்கு றுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கொஞ்சம் கூட கூசாமல் ஒரு பொ ய்யான தகவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் ரூ.1000 மாதம் தோறும் வழங்குவோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது மகளிர் உரிமைத்தொகை தகுதியின் அடிப்படையில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மற்ற ஒரு கோடி குடும்பத்தார்களை ஏமாற்றி விட்டனர்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் எது கிடைக்கிறதோ இல்லையோ மதுபாட்டில் தெருவுக்கு தெரு எங்கே போனாலும் கிடைக்கிறது. பெட்டி கடைக்கு கள்ள சந்தை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் இப்படி சமூக விரோதச் செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கெல்லாம் கஞ்சா, மது போதை தான் காரணம்.
மக்களுடைய வாழ்வா தாரங்களை பறித்து தி.மு.க. வினர் மக்களை போதையி லேயே வாழ வைத்திருப்பது தான் திராவிட மாடலா? இப்படிப்பட்ட மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப காலம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் சிங்கமுத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கிழக்கு ஒன்றிய அவை த்தலைவர் தவமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயசீலன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முனியப்பன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் சிமியோன் ராஜ், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். மன்ற பொறுப்பாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்