search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி"

    • உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை
    • பல மாதங்களாக எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து கிடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

    பொதுமக்கள், தெருக்களின் பெயர்களை அறியும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெருக்களின் பெயர்களை குறிக்கும் வகையில், பேரூராட்சி சார்பில் சில்வர் பெயர் பலகையில் பெயர்களை ஸ்டிக்கராக ஒட்டி வைக்கப்பட்டது.

    பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தெரு பெயர் பலகைகளை, உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

    தற்போது, பெயர் பலகைகள், பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்து, வீணாகி உள்ளன.ஒரு சில தெருக்களில் உள்ள பெயர் பலகையில், எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து பல மாதங்களாக உள்ளன.

    பெரும்பாலான இடங்களில் சில பெயர் பலகைகள் காணாமலும் போய் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள், தெருக்கள் பெயர் தெரியாமல் அலைகின்றனர். இதனால் வெளியூர் வாசிகள், தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டு செல்வதில் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் தெரு பெயர்களை ஸ்டிக்கர் ஒட்டியும் மற்றும் பெயர் பலகை இல்லாத இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×