search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "64 அடியை எட்டியது"

    • தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது. வரத்து 781 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4426 மி.கன அடி.

    மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.90 அடியாக உள்ளது. வரத்து 710 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3400 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 97 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு 1.6, தேக்கடி 2.2, உத்தமபாளையம் 2.4, போடி 2.6, வைகை அணை 16.8, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 21, வீரபாண்டி 9.2, அரண்மனைப்புதூர் 10.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×